பெங்களூரில் பியூசி மாணவியை சுட்டுக் கொன்ற கல்லூரி பியூன்!!
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: பெங்களூரில் நேற்றிரவு 18 வயது பியூசி மாணவி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் ஒயிட்பீல்டு அருகே உள்ள காடுகோடியில் நடந்தது.
காடுகோடியில் உள்ள பிரகதி பியூசி கல்லூரியின் ஹாஸ்டலில் தங்கி பியூசி 2ம் ஆண்டு (பிளஸ் டூ) படித்து வந்தவர் கெளதமி (18). கர்நாடகத்தின் தும்கூர் நகரைச் சேர்ந்த இவரை நேற்றிரவு 10.30 மணியளவில் அந்தக் கல்லூரியில் வேலைபார்த்து வந்த மகேஷ் (30) என்ற பியூன் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிவிட்டார்.

மகேஷை தடுக்க முயன்ற கெளதமியின் தோழி ஸ்ரீஷாவையும் அந்த நபர் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
ஹாஸ்டலின் வாசலில் இந்த சம்பவம் நடந்தது.
இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பியூனிடம் துப்பாக்கி எப்படி வந்தது என்பது ஆச்சரியமாக உள்ளது. தப்பியோடிவிட்ட அவனைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications