உ.பி.யில் அதிசயம்: தும்பிக்கையுடன் பிறந்த பெண் குழந்தை
அலிகர்: உத்தர பிரதேசத்தில் தும்பிக்கையுடன் பிறந்துள்ள அதிசய பெண் குழந்தையை பலரும் பார்த்து வியக்கிறார்கள்.
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதிய ஆட்டத்தை இந்திய ரசிகர்கள் வியாழக்கிழமை ஆவலுடன் பார்த்தனர். இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தில் உள்ள கோதி லங்கரம் என்ற கிராமத்து மக்கள் மட்டும் போட்டியை காணவில்லை.
காரணம் நேற்று அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த பெண் குழந்தை தும்பிக்கையுடன் பிறந்துள்ளது. தும்பிக்கையுடன் பிறந்த குழந்தையை பார்க்கத் தான் அந்த கிராமத்தினர் சென்றனர்.

சிலர் அந்த குழந்தையை விநாயகரின் மனைவி என்று தெரிவித்தனர். குழந்தையை பார்க்க அந்த கிராமத்திற்கு பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வந்தனர். இதையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் வந்தனர்.
இது குறித்து குழந்தையின் தந்தை ஓம் பிரகாஷ் கூறுகையில்,
என் மகள் பிறந்த நேரம் எங்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்று நம்புகிறோம். என் மகள் காலை 7 மணிக்கு பிறந்தாள் என்றார்.
காய்கறி விற்கும் பிரகாஷ் தினமும் ரூ.250 சம்பாதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications