BREAKING NEWS: சபரிமலையில் 144 தடை உத்தரவு.. !
கேரளாவில் சபரிமலை கோவிலின் நடை தற்போது திறக்கப்பட்டு இருக்கிறது.
திருவனந்தபுரம்: சபரிமலைக்கு பெண்கள் வரக் கூடாது என்று எதிர்த்துப் போராடுவோரை தடியடி நடத்தி போலீஸார் ஒடுக்கிய நிலையில் தற்போது சபரிமலையைச் சுற்றிலும் 144 தடை உத்தரவை கேரள மாநில அரசு பிறப்பித்துள்ளது.
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து பெரும் போராட்டம் நடக்கிறது. சபரிமலை அருகே உள்ள நிலக்கல், பம்பை, இளவங்கல் ஆகிய பகுதிகளில் பாஜக தலைமையிலான எதிர்ப்பாளர்கள் நடத்திய போராட்டத்தை தடியடி நடத்தி போலீஸார் கலைத்தனர். இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை தற்போது திறக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video
கோவிலுக்கு வெளியே கலவரம் நடக்கும் நிலையில் நடை திறக்கப்பட்டது. கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது பதட்டமான நிலை நிலவுவதால் பம்பை, சபரிமலை, நிலக்கல், இளவங்கல் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் நூகு தெரிவித்துள்ளார். இந்த தடை உத்தரவு ஐயப்ப பக்தர்களுக்குப் பொருந்தாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.
சபரிமலைக்கு பெண்கள் வருவதை எதிர்ப்போர் மீது தடியடி
தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைக்கிறது போலீஸ்
போலீஸ் தடியடியால் நிலக்கல் போர்க்களமாகியுள்ளது
காலையில் சபரிமலைக்கு வந்த பெண்கள் தடுக்கப்பட்டனர்
பெண் நிருபர்களின் கார் சேதப்படுத்தப்பட்டது
தமிழகத்தைச் சேர்ந்த குடும்பத்தினரும் தாக்கப்பட்டதால் பரபரப்பு
#WATCH: Police lathi-charge and pelt stones at the protesters gathered at Nilakkal base camp, in Kerala. #SabarimalaTemple pic.twitter.com/DMC1ePz0l2
— ANI (@ANI) October 17, 2018
நிலக்கல் பகுதியில் காங்கிரஸ் தலைவர்கள் அமைதிவழி போராட்டம்
Kerela: Congress party leaders hold a peaceful protest in Nilakkal against the entry of women in the age group of 10-50 to #SabarimalaTemple pic.twitter.com/EtHSp6NNrv
— ANI (@ANI) October 17, 2018
நிலக்கல் பகுதியில் காங்கிரஸ் தலைவர்கள் அமைதிவழி போராட்டம்
Kerela: Congress party leaders hold a peaceful protest in Nilakkal against the entry of women in the age group of 10-50 to #SabarimalaTemple pic.twitter.com/EtHSp6NNrv
— ANI (@ANI) October 17, 2018
நிருபர் கார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசியதால் கார் கண்ணாடிகள் உடைப்பு
சேதமடைந்த கார் கிரேன் மூலம் அகற்றம்
Pamba: Police detain people protesting against the entry of women in the age group of 10-50 women to Kerala's #SabarimalaTemple pic.twitter.com/DLdoYMVz8J
— ANI (@ANI) October 17, 2018
பக்தர்கள் போராட்டம் தீவிரமாகிய நிலையில் மழையாலும் பெண்கள் போக முடியாமல் பாதிப்பு
#WATCH: Women protest in Nilakkal against the entry of women in the age group of 10-50 to #Sabarimala temple. #Kerala pic.twitter.com/GuxDZo0R7G
— ANI (@ANI) October 17, 2018
40 வயதான மாதவி கோவிலுக்குள் நுழைந்து புதிய வரலாறு
சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த முதல் பெண் என்ற பெயர் பெற்றார்
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் எதிரொலியாக சபரிமலைக்கு வந்தார் மாதவி
மாதவியைத் தடுத்து நிறுத்தி போராட்டக்காரர்கள் வாக்குவாதம்
மாதவிக்குப் போலீஸார் பாதுகாப்பு அளித்து கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர்