370-வது பிரிவை கோரும் கூட்டணி பாஜகவுக்குதான் எதிரானது- தேசத்துக்கு எதிரானது அல்ல: பரூக் அப்துல்லா
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 370வது பிரிவை அமல்படுத்த கோரும் குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணி என்பது பாரதிய ஜனதா கட்சிக்குத்தான் எதிரானதே தவிர இந்த தேசத்துக்கு எதிரானது அல்ல என அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் 7 அரசியல் கட்சிகள் இணைந்து குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணியை உருவாக்கி உள்ளன. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த கூட்டணியின் கொள்கை.
இதனை பாரதிய ஜனதா கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக இந்த கூட்டணியின் கூட்டங்களில் பங்கேற்காமல் புறக்கணித்து வருகிறது. ஆனால் இந்த கூட்டணிக்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

பரூக் அப்துல்லா- மெகபூபா முப்தி
இந்த நிலையில் குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணியின் தலைவராக அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த கூட்டணியின் துணைத் தலைவராக மற்றொரு முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி நியமிக்கப்பட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பரூக் அப்துல்லா கூறியதாவது:

பாஜகவுக்குதான் எதிர்ப்பு
குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணியை தேசவிரோத சக்தியாக பாஜக பொய்யான பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. இது உண்மை அல்ல. இந்த கூட்டணி நிச்சயம் பாஜகவுக்குத்தான் எதிரானது. தேசத்துக்கு எதிரானது அல்ல இந்த கூட்டணி.

தகர்க்கப்பட்டது கூட்டாட்சி முறை
அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை ரத்து செய்திருப்பதன் மூலம் தேசத்தின் கூட்டாட்சி அமைப்பு முறையை தகர்த்திருக்கிறது பாஜக. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை 2 கூறுகளாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக்கி இருக்கிறது பாஜக. இந்த தேசத்தின் அரசியல் சாசனத்தையே பாஜகதான் நிர்மூலமாக்கி இருக்கிறது.

உரிமை மீட்புதான் இலக்கு
நாட்டை துண்டு துண்டாக துண்டாட நினைக்கிறது பாஜக. எங்களைப் பொறுத்தவரை ஜம்மு, காஷ்மீர், லடாக் மக்கள் இழந்த உரிமைகளை மீண்டும் பெற வேண்டும் என்பதுதான் நோக்கம். எங்களுடைய யுத்த களமும் இதுதான். இதைத்தாண்டிய எந்த ஒரு கொள்கையும் எங்களுக்கும் இல்லை. ஜம்மு காஷ்மீரை மதரீதியாக பிரிக்கிறது பாஜக. ஆனால் எங்களது அடையாளத்துக்காக நாங்கள் போராடுகிறோம். இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications