குஜராத்தில் 4 விவசாயிகளுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு வாபஸ்.. பெப்சி நிறுவனம் அறிவிப்பு
அஹமதாபாத்: குஜராத் மாநிலத்தில் 4 விவசாயிகளுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை பெப்சிகோ நிறுவனம் திரும்ப பெற்றுள்ளது.
பெப்சி நிறுவனம் லேஸ் சிப்ஸ் தயாரிக்க சில உருளைக்கிழங்கு விதைகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளது.இந்நிலையில் லேஸ் சிப்ஸ் ரக விதைகளை பெப்சிகோ நிறுவனத்தின் அனுமதியின்றி குஜராத்தின் சபர்கந்தா, ஆரவல்லி மாவட்டத்தைச் சேர்ந்த சில விவசாயிகள் பயிரிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அறிவுசார் சொத்துரிமையின் படி, பெப்சி நிறுவனம் தலா ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு 4 விவசாயிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில இடங்களில் பெப்சி நிறுவனத்தின் செயலை கண்டித்து போராட்டங்களும் நடந்தது.
இதனிடையே குஜராத் அரசு விவசாயிகளுக்கு சட்ட ரீதியான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்தது. மேலும் நீதிமன்றத்திற்கு வெளியே இந்த விவகாரத்தை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என அம்மாநில முதல்வர் நிதின் படேல் தெரிவித்தார்.
இதனிடையே எப்5 என்று அழைக்கப்படும் லேஸ் தயாரிப்பதற்கான உருளைக்கிழங்குகளை பயிரிடுவதை நிறுத்தினால் வழக்கை வாபஸ் பெறுவதாக பெப்சிகோ நிறுவனம் கடந்த ஏப்ரல் 26ம் தேதி அறிவித்தது. இந்நிலையில் அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து 4 விவசாயிகளின் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக பெப்சிகோ நிறுவனம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications