தலிபான் தாக்குதலுக்கு இந்தியாதான் காரணமாம்..."விஷத்தை"கக்கும் பாக். பாதுகாப்பு வல்லுநர்கள்!
டெல்லி: பெஷாவர் தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக தெஹ்ரிக் இ தலிபான் என்ற பாகிஸ்தான் தீவிர அமைப்பு பொறுப்பேற்ற நிலையிலும் கூட இதற்கும் இந்தியாதான் காரணம் என்று விஷத்தைக் கக்கி வருகின்றனர் ஐ.எஸ்.ஐ.யுடன் இயங்கி வரும் பாகிஸ்தான் பாதுகாப்பு வல்லுநர்கள்.
பெஷாவரில் பள்ளிக் குழந்தைகளை தலிபான்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் உலகை அதிர வைத்துள்ளது. இந்த சம்பவத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளதுடன் நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் நேற்று முதல் பாகிஸ்தான் பாதுகாப்பு வல்லுநர்கள் தாக்குதலுக்கு இந்தியாதான் காரணம் என்று பல விஷமனத்தனமான கருத்துகளை பரப்பி வருகின்றனர்.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-யின் கைக்கூலிகளாகவும் அந்த அமைப்பின் செயல் திட்டத்துக்கு ஏற்றவாறும் கருத்துகளை ஊடகங்களில் முன்வைக்கும் கும்பல்தான் இது. இவர்களது விஷமக் கருத்துகளே இளைஞர்களை மூளை சலவை செய்து தீவிரவாதிகளாக்கி வருகிறது.
இதனை நிரூபிக்கும் வகையில்தான் பாகிஸ்தானின் பாதுகாப்பு துறை வல்லுநர் என்று அழைக்கப்படுகிற சையம் ஜயீத் ஜமான் ஹமீத், இந்தியாவே! உங்களது வன்முறையை நாங்கள் மன்னிக்கமாட்டோம்.. நீங்கள் டிசம்பர் 16-ந் தேதியை குறித்து வைத்து தாக்கியுள்ளீர்கள்.. நாங்கள் உங்களை ஒழிப்பதில் உறுதியாக உள்ளோம்" என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
பின்னர் தெஹ்ரிக்- இ- தலிபான்கள் பொறுப்பேற்பதாக அறிவித்த நிலையிலும் கூட , "இரக்கமற்ற பொறுப்பேற்றல்" என்று விமர்சித்ததுடன் அந்த அமைப்பே இந்தியாவின் நிதி உதவியுடன் செயல்படுகிறது என்று தமது ப்ளாக்கில் எழுதினார்.
போதும்தானே! இளைஞர்களை தூண்டிவிட்டாயிற்று.. அவசரப்பட்டு ஹமீத்தின் இந்தக் கருத்தை ஆதரித்து பலரும் இதேபோலவே பதிவு செய்துள்ளனர்.
@imran_sidra என்பவர், 1971ஆம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி இந்தியா- பாகிஸ்தான் போர் நடைபெற்றது. தற்போது 2014 டிசம்பர் 16-ந் தேதி இந்தியா மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது என்று எழுதியுள்ளார்.
நோசீன் சஃப்தார் என்பவரோ, இந்த தாக்குதலின் பின்னணியில் இருநாடுகள் இருக்கின்றன என்று குறிப்பிட்டு இந்தியா- ஆப்கானிஸ்தான் சதி என குறிப்பிடும்வகையில் ஹேஷ்டேக் போட்டுள்ளார்.
HawkEye @MyBoo911 என்பவர், பள்ளிக் கூட்டத்தில் தீவிரவாதிகள் வெடிக்க வைத்த குண்டுகள் 'இந்தியாவில்' தயாரிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
பெஷாவர் படுகொலைக்கு தலிபான்களே பொறுப்பேற்றுவிட்ட நிலையில் இந்தியா மீது அவதூறாக வன்மம் கக்க வைக்கிறது ஐ.எஸ்.ஐ.... அதனையே பாதுகாப்பு வல்லுநர்கள் என்ற போர்வையில் ஒரு சில கும்பலும் பரப்பிக் கொண்டு இருக்கிறது!
-
வங்கதேசம் மட்டுமில்லை.. இந்தியாவிடம் கெஞ்சும் இலங்கை - மாலத்தீவு.. ஈரான் போரால் மாறிய நிலைமை -
ஹார்முஸ் முடங்கினாலும் பிரச்சனை வராது.. LPG சிக்கலுக்கு உள்நாட்டிலேயே இருக்கும் தீர்வு! இது தெரியுமா -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட்












Click it and Unblock the Notifications