ஷீனா கொலை பற்றி பீட்டர் முகர்ஜிக்கு ஏற்கனவே தெரியும்: சிபிஐ
மும்பை: ஸ்டார் இந்தியா நிறுவன முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜிக்கு இந்திராணி ஷீனா போராவை கொலை செய்தது தெரியும் என்று சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
ஸ்டார் இந்தியா நிறுவன முன்னாள் சிஇஓ பீட்டர் முகர்ஜியின் மனைவி இந்திராணி தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்து அவரது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தார். இந்த வழக்கில் போலீசார் இந்திராணி, அவரது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா, முன்னாள் கார் டிரைவர் ராய் ஆகியோரை கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் வியாழக்கிழமை பீட்டரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். ஷீனா கொலை குறித்து பீட்டரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து சிக்கினார்.
பீட்டர் இன்று மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,
ஷீனா கொலை பற்றி பீட்டருக்கு ஏற்கனவே தெரியும். ஷீனா கொலை செய்யப்பட்டபோதும், அவரது உடல் எரிக்கப்பட்டபோதும் பீட்டர் இந்திராணியுடன் செல்போனில் தொடர்பில் இருந்துள்ளார். ஷீனா குறித்து கேட்ட தனது மகன் ராகுலிடம் அவர் பொய் சொல்லியுள்ளார். ஷீனா அமெரிக்கா சென்றுவிட்டதாகவும், அவருடன் போனில் பேசியதாகவும் பீட்டர் ராகுலிடம் தெரிவித்துள்ளார். இந்த தகவலை பீட்டர் போனில் தெரிவித்தபோது ராகுல் அதை பதிவு செய்துள்ளார்.

பின்னர் ராகுல் அந்த செல்போன் பேச்சு பதிவை சிபிஐ அதிகாரிகளிடம் அளித்தார். அவரை எங்கள் காவலில் வைத்து 14 நாட்கள் விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.
பீட்டரின் வழக்கறிஞரோ அவர் கொலை நடந்தபோது லண்டனில் இருந்ததாகவும், இது குறித்து அவருக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பீட்டரை வரும் 23ம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்க உத்தரவிட்டார். ஷீனா கொலை வழக்கில் இந்திராணி உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்ட கொலை உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் பீட்டர் மீதும் தற்போது சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்திராணி, கன்னா, ராய் ஆகியோரின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து அவர்களின் நீதிமன்ற காவல் வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
நகைகள் கிடைக்கவில்லை.. அஜித்குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகாரை முடித்து வைத்தது சிபிஐ! -
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்.. மார்ச் 17ல் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கும் செந்தில் பாலாஜி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம்












Click it and Unblock the Notifications