பெட்ரோல் லிட்டருக்கு ரூ1.23 உயர்வு, டீசல் லிட்டருக்கு 89 காசுகள் உயர்வு
டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ1.23, டீசல் விலை லிட்டருக்கு 89 காசுகளும் உயர்ந்துள்ளது. புதிய விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று இரவு பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ1.23, டீசல் விலை லிட்டருக்கு 89 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. புதிய விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications