கேரளாவில் வடியத் தொடங்கிய வெள்ளம்.. ஆனால் பெட்ரோல், டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு!
கேரளாவில் வெள்ளம் வடியத்தொடங்கிய நிலையில், அங்கே பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளம் வடியத் தொடங்கிய நிலையில், அங்கே பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க்குகளில் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர்.
கேரளாவில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிலும், நிலச்சரிவிலும் சிக்கி 380 பேர் பலியானார்கள். 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி சிக்கித் தவித்தது. 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர், கடற்படை, விமானப்படை வீரர்கலு சேர்ந்து மீட்டனர்.

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் ரூ.19,500 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். கேரளாவில் பல சாலைகள் வெள்ளத்தில் முழுவதுமாக சேதம் அடைதுள்ளது என்று தெரிவித்தார்.
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடரைக் மத்திய அரசு ரூ.600 கோடி அறிவித்தது. இந்தியாவின் மற்ற மாநிலங்களும் கேரள அரசுக்கு வெள்ள நிவாரண நிதி அளித்தன.
இந்நிலையில், கேரளாவில் வெள்ளம் வடியத்தொடங்கியுள்ளது. இதனால், மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை செய்ய தொடங்கியுள்ளனர். தங்களுடைய இருசக்கர வாகனங்களை எடுத்துக்கொண்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்திக்க செல்கின்றனர்.
தற்போது, கேரளாவில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் சில பெட்ரோல் பங்க்குகளில் இரு சக்கர வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் போட்டுக்கொண்டு செல்கின்றனர். பெட்ரோலுக்காக பங்க்குகளில் பல மணி நேரம் காத்திருந்து பெட்ரோல் போட்டுக்கொண்டு செல்கின்றனர்.
இருப்பினும் இந்த பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு விரைவில் சரியாகிவிடும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications