கேரளாவில் வடியத் தொடங்கிய வெள்ளம்.. ஆனால் பெட்ரோல், டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு!
கேரளாவில் வெள்ளம் வடியத்தொடங்கிய நிலையில், அங்கே பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளம் வடியத் தொடங்கிய நிலையில், அங்கே பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்க்குகளில் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்கின்றனர்.
கேரளாவில் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிலும், நிலச்சரிவிலும் சிக்கி 380 பேர் பலியானார்கள். 14 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி சிக்கித் தவித்தது. 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர், கடற்படை, விமானப்படை வீரர்கலு சேர்ந்து மீட்டனர்.

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் ரூ.19,500 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். கேரளாவில் பல சாலைகள் வெள்ளத்தில் முழுவதுமாக சேதம் அடைதுள்ளது என்று தெரிவித்தார்.
கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடரைக் மத்திய அரசு ரூ.600 கோடி அறிவித்தது. இந்தியாவின் மற்ற மாநிலங்களும் கேரள அரசுக்கு வெள்ள நிவாரண நிதி அளித்தன.
இந்நிலையில், கேரளாவில் வெள்ளம் வடியத்தொடங்கியுள்ளது. இதனால், மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை செய்ய தொடங்கியுள்ளனர். தங்களுடைய இருசக்கர வாகனங்களை எடுத்துக்கொண்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களைச் சந்திக்க செல்கின்றனர்.
தற்போது, கேரளாவில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் சில பெட்ரோல் பங்க்குகளில் இரு சக்கர வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெட்ரோல் போட்டுக்கொண்டு செல்கின்றனர். பெட்ரோலுக்காக பங்க்குகளில் பல மணி நேரம் காத்திருந்து பெட்ரோல் போட்டுக்கொண்டு செல்கின்றனர்.
இருப்பினும் இந்த பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு விரைவில் சரியாகிவிடும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
-
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
டீசல் + ஐசோபியூட்டனால்.. மத்திய அரசின் அடுத்த மெகா திட்டம்.. இதுமட்டும் நடந்துட்டா போதும்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications