லாரி டிரைவர்கள் ஸ்டிரைக்: பெங்களூர் நகரில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு.. வாகன ஓட்டிகள் அவதி
பெங்களூர்: அடிப்படை வசதி கேட்டு லாரி டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் போராட்டம் நடத்தி வருவதால், பெங்களூர் நகரில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பெங்களூர் நகரத்திலுள்ள பெட்ரோல் பங்களுக்கு, தேவன்குந்தி, தேவனஹள்ளி, ஹொசபேட் ஆகிய முனைங்களில் இருந்து, எரிபொருள் எடுத்து வரப்படுகிறது. முனையங்களுக்கு செல்லும் சாலையை பழுது செய்ய வேண்டும், முனையத்தில், டிரைவர், கிளீனர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி டிரைவர் மற்றும் கிளீனர் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.

வேலை நிறுத்தம் காரணமாக, பெங்களூர் நகருக்குள் பெட்ரோல் சப்ளை தடை பட்டுள்ளது. பெங்களூர் பெட்ரோல் டீலர்கள் சங்கத்தின் செயலாளர் லோகேஷ் கூறுகையில், 600 லோடு எரிபொருளுக்கு பதிலாக 30 லோடு மட்டுமே திங்கள்கிழமை சப்ளையாகியுள்ளது. செவ்வாய்க்கிழமையான இன்று நிலைமை இன்னும் மோசமாகும் என்றார்.
நேற்று இரவு முதலே நகரின் பல பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் இல்லை என்ற அறிவிப்பை பார்க்க முடிந்தது. பெட்ரோல் கிடைக்கும் பங்க்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை இன்று பார்க்க முடிந்தது. இன்று முதல் டீசலுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications