காய்கறி விற்கும் இந்த பெண் யார் தெரியுமா.. கேட்டால் அசந்து போய்டுவீங்க.. ஆச்சரியத்தில் இந்தூர்!
இந்தூர்: தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்யும் பெண் சரளமாக ஆங்கிலம் பேசுகிறார். பிஹெச்டி முடித்துள்ளதாக கூறி ஆச்சர்யப்பட வைத்த அவர், காய்கறி விற்பனை தொழிலுக்கு வந்தது குறித்து கூறிய காரணம் வியப்பாக இருந்தது.
கொரோனா ஊரடங்கு என்பது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வியாபாரிகளை கடுமையாக பாதித்துள்ளது. அதிலும் சாலையோரம் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவர்களை நிலைகுலைய வைத்துள்ளது. இதில் இருந்து அவர்கள் மீள்வது என்பது மிகவும் கடினம்.
இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் முக்கியமான நகரான இந்தூரில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார் ரைசா அன்சாரி. இவர் இந்தூரின் தேவி அஹில்யா பல்கலைக்கழகத்தில் பொருள் அறிவியலில் பி.எச்.டி (டாக்டர் ஆஃப் தத்துவத்தை) முடித்திருக்கிறார்.

சரளமாக ஆங்கிலம்
ரைசா அன்சாரி வியாழக்கிழமை, மாநகராட்சி அதிகாரிகள் சாலையோர காய்கறி வண்டிகளை அகற்ற வந்தபோது எதிர்ப்பு தெரிவித்தார். சரளமாக ஆங்கிலத்தில் பேசிய அவர், காய்கறி விற்பனையாளர்கள் மாநகராட்சி அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சாட்டினார். அவரது கல்வி குறித்து கேட்டபோது, தான் முனைவர் பட்டம் வாங்கிய பெண் என்று கூறினார்.

காய்கறி மார்க்கெட் மூடல்
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்தூரின் சந்தைகளில் மீண்டும் மீண்டும் தடைகள் ஏற்படுத்தி பழம் மற்றும் காய்கறி விற்பனையாளர்களை அபாயகரமான நிலைக்கு தள்ளிவிட்டதாக தனது ஆதங்கத்தை வீடியோவில் தெரிவித்தார். ஒரு சமயம், சந்தையின் ஒரு பக்கம் மூடப்பட்டுள்ளது, இரண்டாவது ஒரு பகுதி நிர்வாகத்தால் மூடப்பட்டுள்ளது.

வாங்க ஆள் இல்லை
காய்கறி வாங்க யாரும் வரவில்லை நான் எங்கள் குடும்பத்தின் சாப்பாட்டிற்காக இங்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்கிறேன். இங்கே நிற்கும் மக்கள் என்னுடையவர்கள். குடும்பம் மற்றும் நண்பர்கள். குடும்பத்தில் 20 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் எப்படி பிழைப்பார்கள்? அவர்கள் எப்படி சம்பாதிப்பார்கள்? எங்களுக்கு எந்த வியாபாரமும் ஆகவில்லை. ஆனால் இந்த அதிகாரிகள் எங்களை இங்கிருந்து செல்லுமாறு விரட்டுகிறார்கள்" என்றார்

ஏன் வேலை கிடைக்கவில்லை
பிஹெச்டி படித்த நீங்கள் ஏன் ஒரு சிறந்த வேலையை ஏன் தேர்வு செய்யவில்லை என்று கேட்டதற்கு, தனக்கு ஒரு வேலையும் கிடைக்கவில்லை என்று கூறினார்.
இதுபற்றி அவர்கூறும் போது. "முதல் கேள்வி என்னவென்றால்: எனக்கு யார் வேலை கொடுப்பார்கள்? முஸ்லிம்களிடமிருந்து கொரோனா வைரஸ் உருவாக்கப்படுகிறது என்ற கருத்து இப்போது பொதுவானதாகிவிட்டது. என் பெயர் ரெய்சா அன்சாரி என்பதால், எந்த கல்லூரியும் ஆராய்ச்சி நிறுவனமும் எனக்கு வேலை கொடுக்க தயாராக இல்லை," என்று அவர் குற்றம்சாட்டினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications