குப்பையில் கிடந்த பெண் குழந்தையின் தலையை கிழித்து, உடலை குதறிக் கொன்ற பன்றிகள்
வாரங்கல்: தெலுங்கானாவில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தையை பன்றிகள் குதறியதில் அது பலியானது.
தெலுங்கானா மாநிலம் வாரங்கலின் புறநகர் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் பச்சிளம் பெண் குழந்தையை யாரோ போட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பன்றிகள் குழந்தையின் தலையை கிழித்து, அதன் உடம்பை கடித்துக் குதறியுள்ளன.

பன்றிகள் குழந்தையின் உடலை கிழிப்பதை பார்த்த உள்ளூர் மக்கள் ஓடி வந்து அவற்றை விரட்டினர். ஆனால் அதற்குள் குழந்தை இறந்துவிட்டது. இது குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் வந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில்,
பெண் குழந்தை வேண்டாம் என்று யாரோ அதை பிளாஸ்டிக் பையில் போட்டு குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர். பன்றிகள் பிளாஸ்டிக் பையை கிழித்து குழந்தையை கொன்றுவிட்டன என்றனர்.












Click it and Unblock the Notifications