முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ய சர்வதேச குழு.. உச்சநீதிமன்றத்தில் வக்கீல் மனு
டெல்லி: முல்லை பெரியாறு அணையை முடக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வக்கீல் ஒருவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி: முல்லைப் பெரியார் அணை பலவீனமாக உள்ளது. இயற்கை சீற்றம் ஏற்பட்டால் அணை உடையும் அபாயம் உள்ளது. இது அனணப்பகுதி அருகே வசிக்கும் மக்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பு உரிமைக்கு எதிரானது என்று கூறி வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

முல்லை பெரியார் அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், அதில் தமிழ்நாடு 142 அடி உயரம் வரை தண்ணீர் சேமிக்கலாம் எனவும் 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த 2014ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதை மறுபசீலனை செய்யக்கோரி கேரள அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால் அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கில் மீண்டும் ஒரு திருப்பமாக, வழக்கறிஞர் ரஸல் ஜாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் முல்லை பெரியாறு குறித்து ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
முல்லைப் பெரியார் அணை பலவீனமாக உள்ளது. இயற்கை சீற்றம் ஏற்பட்டால் அணை உடையும் அபாயம் உள்ளது. இது அனணப்பகுதி அருகே வசிக்கும் மக்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பு உரிமைக்கு எதிரானது.
அணையை ஆய்வு செய்து அதன் செயல்பாட்டை நிறுத்த சர்வதேச நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். அணை பாதுகாப்பு தொடர்பான அமெரிக்க விதி முறைப்படி நிபுணர் குழு அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications