முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்ய சர்வதேச குழு.. உச்சநீதிமன்றத்தில் வக்கீல் மனு
டெல்லி: முல்லை பெரியாறு அணையை முடக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வக்கீல் ஒருவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி: முல்லைப் பெரியார் அணை பலவீனமாக உள்ளது. இயற்கை சீற்றம் ஏற்பட்டால் அணை உடையும் அபாயம் உள்ளது. இது அனணப்பகுதி அருகே வசிக்கும் மக்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பு உரிமைக்கு எதிரானது என்று கூறி வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

முல்லை பெரியார் அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், அதில் தமிழ்நாடு 142 அடி உயரம் வரை தண்ணீர் சேமிக்கலாம் எனவும் 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த 2014ம் ஆண்டு உத்தரவிட்டது.
இதை மறுபசீலனை செய்யக்கோரி கேரள அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால் அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கில் மீண்டும் ஒரு திருப்பமாக, வழக்கறிஞர் ரஸல் ஜாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் முல்லை பெரியாறு குறித்து ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
முல்லைப் பெரியார் அணை பலவீனமாக உள்ளது. இயற்கை சீற்றம் ஏற்பட்டால் அணை உடையும் அபாயம் உள்ளது. இது அனணப்பகுதி அருகே வசிக்கும் மக்களின் உயிர் மற்றும் உடமைகளின் பாதுகாப்பு உரிமைக்கு எதிரானது.
அணையை ஆய்வு செய்து அதன் செயல்பாட்டை நிறுத்த சர்வதேச நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். அணை பாதுகாப்பு தொடர்பான அமெரிக்க விதி முறைப்படி நிபுணர் குழு அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications