இந்திரா காந்தியின் படுகொலையை தற்கொலையாக அறிவிக்க கோரிய வழக்கு.. 29 ஆண்டுகளுக்கு பின்னர் தள்ளுபடி..

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: இந்திரா காந்தியின் படுகொலையை தற்கொலையாக அறிவிக்கக் கோரிய வழக்கை 29 ஆண்டுகளுக்கு பிறகு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 31-10-1984 அன்று தனது மெய்க்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

indiragandhi

இது கொலை அல்ல என்றும் தனது மகன் ராஜீவ் காந்தியை பிரதமராக்க இந்திரா காந்தியின் தற்கொலை முயற்சியாக இதை அறிவிக்க வேண்டும் எனவும் குஜராத் மாநிலத்தை சேர்ந்த நவ்னிடால் ஷா என்பவர் கடந்த 1986-ம் ஆண்டு குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சுமார் 29 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கை இன்று தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இவ்வழக்கின் மனுதாரர் தொடர்ந்து ஆஜராகாததால் இந்திரா காந்தி தனது மகன் ராஜீவ் காந்தியை பிரதமராக்கும் நோக்கத்தில் தற்கொலை செய்துகொண்டார் என்று அறிவிக்க கோரிய இவ்வழக்கை தள்ளுபடி செய்வதாக தனது தீர்ப்பில் நீதிபதி சஹாய் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+