முதுகுவலி: இந்த ஆண்டும் பட்ஜெட்டை அமர்ந்து வாசித்த அருண் ஜெட்லி!
டெல்லி: மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தனது பட்ஜெட் உரையை லோக்சபாவில் தனது இருக்கையில் அமர்ந்து கொண்டு வாசித்தார். கடந்த ஆண்டு பட்ஜெட் வாசிக்கும் போது முதுகுவலி காரணமாக சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் இருக்கையில் அமர்ந்து கொண்டு வாசித்தார். இந்த ஆண்டு சபாநாயகரின் வேண்டுகோளை ஏற்று தொடக்கம் முதலே அமர்ந்து கொண்டு வாசித்து வருகிறார்.
2015-16ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். காலை 11 மணிக்கு உரையை வாசிக்கத் தொடங்கும் போது, தேவையெனில் அமர்ந்து கொண்டு படிக்கலாம் என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வேண்டுகோள் விடுத்தார்.

அமர்ந்து கொண்டு
அதற்கு பதில் சொன்ன நிதியமைச்சர், நன்றி மேடம் அவர்களே, தேவையெனில் அமர்ந்து கொள்கிறேன் என்றார். 20 நிமிடங்கள் நின்று கொண்டு பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் பின்னர் சபாநாயகரின் வேண்டுகோளை ஏற்று அமர்ந்து கொண்டு வாசித்தார்.
முதுகுவலி பிரச்சினை
அருண் ஜெட்லிக்கு முதுகுவலி பிரச்சினை இருப்பதால் அவரால் அதிகநேரம் நிற்கமுடியாது என்பதால் இருக்கையில் அமர்ந்து கொண்டு உரையை வாசித்தார்.
கடந்த பட்ஜெட் நேரத்தில்
கடந்த ஜூலை மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த அருண்ஜெட்லி, 11 மணிக்கு பட்ஜெட் வாசிக்க தொடங்கினார். வேகமாக பட்ஜெட் வாசித்த அவர் இடையில் 2 முறை தண்ணீர் குடித்தார்.
சபை ஒத்திவைப்பு
11-45 மணி அளவில் அருண்ஜெட்லி கேட்டுக் கொண்டதால் சபை 5 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது. 61 வயதாகும் அவருக்கு முதுகுவலி ஏற்பட்டதால் சபை ஒத்திவைக்கப்பட்டது தெரியவந்தது.
நாடாளுமன்ற வரலாற்றில் பட்ஜெட் உரை வாசிக்கும் போது சபை ஒத்தி வைக்கப்பட்டது அதுவே முதல் முறையாகும்.
அமர்ந்து கொண்டு
சிறிது ஓய்வுக்குப் பின் மீண்டும் அருண்ஜெட்லி வந்து பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். அதுவரை நின்று கொண்டே பட்ஜெட்டை வாசித்த அவர் அதன்பிறகு இருக்கையில் அமர்ந்து பட்ஜெட் வாசித்தார். அதன் பிறகும் அவர் அடிக்கடி தண்ணீர் குடித்துக் கொண்டே பட்ஜெட் உரையை வாசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications