குடியுரிமை சட்டம்.. கலவரக்காரர்களை உடையை வைத்தே கண்டுபிடிக்கலாம்.. பிரதமர் மோடி பகீர் பேச்சு!
Recommended Video
தும்கா: குடியுரிமை சட்டத்தால் நாடே கொந்தளிப்பதன் பின்னணியில் இருப்பது காங்கிரஸும் அவர்களது கூட்டணி கட்சியினருமே காரணம், இதில் கலவரம் செய்பவர்களை உடையை வைத்தே யார் என்று கண்டுபிடிக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4-ஆவது கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. மொத்தம் 15 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் தும்காவில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அவர் கூறுகையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் வன்முறைக்கு காங்கிரஸும், அதன் கூட்டணி கட்சியும் சப்தமில்லாமல் ஆதரவு தருகின்றன. இந்த காட்சிகள் எல்லாம் நாட்டின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்காகத்தான்.

மோடி
அதாவது குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் மோடி, நாடாளுமன்றம், அரசு ஆகியன நாட்டை பாதுகாத்துவிட்டது. பாகிஸ்தான். ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்தவர்கள், அகதிகளாக வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு மரியாதை தருவதற்காகவே இந்த மசோதா சட்டமாக நிறைவேறியது.

வன்முறை என்ன
காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் இணைந்து அமளியில் ஈடுபடுகின்றன. கலவரம் நடப்பதை அவர்கள் ஊக்குவிக்கின்றனர். அவர்களுக்கு வேறு வழி தெரியாமல் பிரச்சினையை பெரிதாக்குகின்றனர். வன்முறையை உருவாக்குபவர்கள் அடையாளம் காணப்படுவர். இவர்களின் உடையை வைத்தே யார் என்று கண்டுபிடிக்கலாம்.

எந்த திட்டமும் இல்லாத காங்கிரஸ்
நாட்டை முன்னேற்ற காங்கிரஸிடம் எந்த திட்டமும் இல்லை. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களை வன்முறை செய்ய காங்கிரஸ் தூண்டிவிடுகிறது. ஆனால் வன்முறையை செய்ய வடகிழக்கு மாநிலங்கள் தயாராக இல்லை.

வளர்ச்சி திட்டங்கள்
நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் சரி என்பது காங்கிரஸின் செயல்பாடுகளை வைத்தே தெரிகிறது. நாட்டு மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கவலைப்படாமல் எதிர்க்கட்சிகள் அவர்களுக்கு மட்டும் அரண்மனைகளை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். நான் இங்கு வந்ததற்கு காரணம் மாநிலத்தில் பாஜக கட்சி மேற்கொண்ட வளர்ச்சித் திட்டங்களை எடுத்து கூறுவதற்காக என்றார் மோடி.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications