குடியுரிமை சட்டம்.. கலவரக்காரர்களை உடையை வைத்தே கண்டுபிடிக்கலாம்.. பிரதமர் மோடி பகீர் பேச்சு!
Recommended Video
தும்கா: குடியுரிமை சட்டத்தால் நாடே கொந்தளிப்பதன் பின்னணியில் இருப்பது காங்கிரஸும் அவர்களது கூட்டணி கட்சியினருமே காரணம், இதில் கலவரம் செய்பவர்களை உடையை வைத்தே யார் என்று கண்டுபிடிக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4-ஆவது கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. மொத்தம் 15 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் தும்காவில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அவர் கூறுகையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் வன்முறைக்கு காங்கிரஸும், அதன் கூட்டணி கட்சியும் சப்தமில்லாமல் ஆதரவு தருகின்றன. இந்த காட்சிகள் எல்லாம் நாட்டின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்காகத்தான்.

மோடி
அதாவது குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்ததன் மூலம் மோடி, நாடாளுமன்றம், அரசு ஆகியன நாட்டை பாதுகாத்துவிட்டது. பாகிஸ்தான். ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வந்தவர்கள், அகதிகளாக வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு மரியாதை தருவதற்காகவே இந்த மசோதா சட்டமாக நிறைவேறியது.

வன்முறை என்ன
காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் இணைந்து அமளியில் ஈடுபடுகின்றன. கலவரம் நடப்பதை அவர்கள் ஊக்குவிக்கின்றனர். அவர்களுக்கு வேறு வழி தெரியாமல் பிரச்சினையை பெரிதாக்குகின்றனர். வன்முறையை உருவாக்குபவர்கள் அடையாளம் காணப்படுவர். இவர்களின் உடையை வைத்தே யார் என்று கண்டுபிடிக்கலாம்.

எந்த திட்டமும் இல்லாத காங்கிரஸ்
நாட்டை முன்னேற்ற காங்கிரஸிடம் எந்த திட்டமும் இல்லை. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களை வன்முறை செய்ய காங்கிரஸ் தூண்டிவிடுகிறது. ஆனால் வன்முறையை செய்ய வடகிழக்கு மாநிலங்கள் தயாராக இல்லை.

வளர்ச்சி திட்டங்கள்
நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் சரி என்பது காங்கிரஸின் செயல்பாடுகளை வைத்தே தெரிகிறது. நாட்டு மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து கவலைப்படாமல் எதிர்க்கட்சிகள் அவர்களுக்கு மட்டும் அரண்மனைகளை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். நான் இங்கு வந்ததற்கு காரணம் மாநிலத்தில் பாஜக கட்சி மேற்கொண்ட வளர்ச்சித் திட்டங்களை எடுத்து கூறுவதற்காக என்றார் மோடி.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications