எப்போதும் இந்தியில்தான் பேசுகிறார் மோடி, ஐ.நா.விலும் அப்படித்தான் பேசுவார்.. ராஜ்நாத் சிங்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் இந்தியில் உரை நிகழ்த்தவுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இன்று இந்த விவரத்தை டெல்லியில் நடந்த இந்தி தின விழாவின்போது தெரிவித்தார்.
அடல் பிகாரி வாஜ்பாய்க்குப் பிறகு ஐ.நா. கூட்டத்தில் இந்தியில் பேசும் முதல் பிரதமர் மோடிதான் என்றும் கூடுதல் தகவலைத் தெரிவித்தார் ராஜ்நாத் சிங்.

இந்தியைப் பிடித்துத் தொங்கும் பாஜக
பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இந்தியைப் பிடித்துத் தொங்க ஆரம்பித்துள்ளது.

குஜராத்தி என்பதை மறைக்க இந்தி ஆர்வமா???
பிரதமர் மோடியும் கூட, தன்னை எங்கே குஜராத்தி என்று எதிர்க்கட்சியினர் மறைமுகப் பிரசாரம் செய்து விடுவார்களோ என்ற எண்ணத்தில், இந்தியிலேயேதான் பேசுகிறார், இந்தியில்தான் எல்லாவற்றையும் மேற்கொள்கிறார்.

ஐ.நா.விலும் இந்தி
இந்த நிலையில், ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள மோடி அங்கு இந்தியிலேயே பேசவுள்ளதாக ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

நானும் பேசியுள்ளேன்
இதுகுறித்து டெல்லியில் நடந்த இந்தி தின விழாவின்போது ராஜ்நாத் சிங் கூறுகையில், நானும் கூட முன்பு அமைச்சராக இருந்தபோது ஐ.நா கூட்டத்தில் இந்தியில் பேசியுள்ளேன். நமது பிரதமரும் தற்போது இந்தியில் பேசப் போகிறார்.

எப்பவும் இந்தியில்தான் பேசுகிறார்
இங்கு மட்டுமல்ல, வெளிநாட்டுத் தலைவர்கள், தூதுவர்கள், பிரமுகர்களுடனான சந்திப்பின்போதும் கூட பிரதமர் இந்தியில்தான் பேசுகிறார் என்றார் ராஜ்நாத் சிங்.

செப்டம்பர் 27ல்
செப்டம்பர் 27ம் தேதி பிரதமர் மோடி ஐ.நா. கூட்டத்தில் பேசுவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

55 சதவீதம் பேர் இந்தியில்தான் பேசுகிறார்கள்
சிங் மேலும் பேசுகையில், நாட்டில் 55 சதவீத மக்கள் இந்தியில்தான் பேசுகிறார்கள். 85 முதல் 90 சதவீதம் பேர் இந்தியைப் புரிந்து கொள்கிறார்கள். அது அவர்களது தாய் மொழியாக இல்லாவிட்டாலும் கூட புரிந்து கொள்ள முடிகிறது.

இந்தியைப் பரப்பிய காந்தி - கோபாலசாமி அய்யங்கார்
மகாத்மா காந்தி, கோபால சாமி அய்யங்கார், பாலகங்காதர திலகர், ஷியாமா பிரசாத் முகர்ஜி போன்றோர் தங்களது தாய் மொழி வேறாக இருந்தாலும் கூட இந்தியைப் பரப்பியவர்களில் முக்கியமானவர்களாக இருந்தனர்.

நாட்டின் பொது மொழி இந்தி
இந்தி நாட்டின் பொது மொழியாக திகழ்கிறது. இந்தி உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளின் தாய் மொழியாக சமஸ்கிருதம் விளங்குகிறது என்றார் அவர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications