27 நக்சலைட்கள் சுட்டுக்கொலை.. மாவோயிஸ்ட் இயக்க முன்னணி தலைவரும் பலி.. பிரதமர் மோடி பெருமிதம்!
டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் பொதுச் செயலாளரான பசவராஜூ உட்பட 27 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதையடுத்து பிரதமர் மோடி, பாதுகாப்பு படையினரை பாராட்டி உள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அங்கு நக்சல் இயக்கத்திற்கு முதுகெலும்பாகவும், மாவோயிஸ்ட் பொதுச் செயலாளருமான பசவராஜு என்கிற நம்பலா கேசவ் ராவ் என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த செய்தியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டு பாதுகாப்பு படையினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார். அமித் ஷா, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "நக்சலிசத்தை ஒழிப்பதற்கான போரில் இது ஒரு முக்கியமான சாதனை. இன்று, சத்தீஸ்கரின் நாராயண்பூரில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், பாதுகாப்புப் படையினர் 27 பயங்கரமான மாவோயிஸ்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
அவர்களில் சிபிஐ - மாவோயிஸ்ட்டின் பொதுச் செயலாளரும், உயர்மட்டத் தலைவரும், நக்சல் இயக்கத்தின் முதுகெலும்புமான நம்பலா கேசவ் ராவ் என்ற பசவராஜுவும் அடக்கம். நக்சலைட்களுக்கு எதிரான 30 ஆண்டுகாலப் போராட்டத்தில், பொதுச் செயலாளர் அந்தஸ்துள்ள ஒரு முக்கிய தலைவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டது இதுவே முதல் முறை." என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், "ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்" (Operation Black Forest) மூலம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் 54 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 84 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 2026ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் நக்சலைட்டை ஒழிக்க மோடி அரசு உறுதியாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தமது எக்ஸ் பக்கத்தில், "பாதுகாப்பு படையினரின் இந்த வெற்றியால் பெருமிதம் கொள்கிறோம். மாவோயிசத்தின் அச்சுறுத்தலை ஒழித்து, நமது மக்களுக்கு அமைதி மற்றும் முன்னேற்ற வாழ்க்கையை உறுதி செய்வதில் நமது அரசாங்கம் உறுதியாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications