பாஜக ஆட்சியில் இட ஒதுக்கீட்டுக்கு ஒரு போதும் பாதிப்பு வராது - மோடி உறுதி
டெல்லி: பாஜக ஆட்சியில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டில் எந்த விதமான மாற்றமும் செய்யப்படாது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கரின் தேசிய நினைவு மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட மோடி இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், இடஒதுக்கீட்டில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இருந்தாலும் பாஜக தலித்துகளுக்கு எதிராக செயல்படுவதாக பொய்யான தகவல்களை எதிர்ககட்சிகள் பரப்பி வருவதாகவும் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

வாஜ்பாய் பிரதமரமாக இருந்தபோதும், பாஜக அரசு இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்யப்போவதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. பாஜக மத்தியில் மட்டுமல்லாது மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களிலும் ஆட்சி செலுத்தியிருக்கிறது. ஆனால், ஒருபோதும் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய நினைத்ததில்லை.
இடஒதுக்கீடு என்பது தலித்துகளின் உரிமை. அதில் தலையிட யாருக்கும் அதிகாரம் இல்லை. எனவே, இடஒதுக்கீடு விவகாரத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடாதீர்கள் என்று கூறினார். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அம்பேத்கார் விளங்கியதாகவும், நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் முன்னேற்றமே அவரின் லட்சியமாக இருந்ததாகவும் மோடி புகழாரம் சூட்டினார்.
இந்தியாவின் மிகப்பெரிய வளம், எரிசக்தித் துறை, இன்னும் பல துறைகளில் அவர் விரிந்து பரந்த லட்சியப் பார்வை கொண்டிருந்தார். மக்கள் அனைவரும் கல்வியறிவு பெற வேண்டும் என்பதையே அவர் எப்போதும் விரும்பினார். கல்வியை நாடி அறிவை வளர்த்துக்குக் கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்வு சக்தியை மக்களிடம் உருவாக்கினார் அம்பேத்கர்.
நாட்டில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற விவகாரம் முன்னெடுக்கப்பட்ட போது, பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படவில்லை எனில், தான் அமைச்சரவையில் பங்கேற்க மாட்டேன் என்று உறுதியாகக் கூறியவர் அம்பேத்கர் என்று மோடி பேசினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications