நாங்கள் நாட்டைக் காக்க முயற்சித்தால் காங். ஒரு குடும்பத்தைப் பாதுகாக்கிறது: பிரதமர் மோடி 'பொளேர்'
டெல்லி: நாங்கள் இந்திய நாட்டைக் காக்க முயற்சிக்கும் போது காங்கிரஸ் கட்சியோ சோனியாவின் குடும்பத்தைப் பாதுகாக்க போராடுகிறது என்று பிரதமர் மோடி தாக்கியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 21-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து இதுவரை ஆக்கப்பூர்வமான விவாதம் எதுவும் நடைபெறவில்லை.
லலித்மோடி, வியாபம் ஊழல் தொடர்பாக நாடாளுமன்றத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் முடங்கின. காங்கிரஸ் எம்.பி.க்களின் அமளி காரணமாக முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை.

நாடாளுமன்றம் இன்று தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி-க்கள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
பா.ஜ.க. நாட்டை காக்க முயலும் போது காங்கிரஸ் ஒரு குடும்பத்தை காக்க முயல்கிறது. ஒரு குடும்பத்திற்காக காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் அவரசரநிலை காலத்தை நினைவுப்படுத்துவது போல் இருக்கிறது. நீங்கள் அனைவரும் உங்கள் தொகுதிகளுக்கு சென்று காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை அம்பலப்படுத்துங்கள்.
முன்னதாக விஜய் சவுக் பகுதியில் இருந்து ஜனாதிபதி மாளிகை வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் 'ஜனநாயகாத்தைப் பாதுகாப்போம்' என்ற முழக்கங்களுடன் சிறிது நேரம் பேரணி நடத்தினர்.












Click it and Unblock the Notifications