சினிமாவில் போலீஸாரை கேலி செய்கிறார்களே.. மோடி வேதனை!
கவுகாத்தி: சாதாரண மக்களிடம் போலீஸ் குறித்த எண்ணத்தை சினிமா மோசமாக்கி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் பிரதமர் மோடி.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த போலீஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
சுதந்திரத்திற்கு பின்னர் ஏராளமான போலீஸ் அதிகாரிகள் தேச சேவையில் தங்கள் இன்னுயிரை ஈந்துள்ளனர். கிட்டத்தட்ட 33 ஆயிரம் போலீசார் உயிரிழந்துள்ளது சாதாரணமானது அல்ல. அவர்களின் தியாகங்கள் வீணாகிவிடக்கூடாது. நாட்டிற்காக போலீசார் செய்த தியாகங்கள் நினைவு கூரப்பட வேண்டும். நாட்டிற்காக தியாகம் செய்ய போலீசாருக்கு இந்த நேரத்தில் நான் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

போலீசாரின் நலன்கள் என்பது ஒரு பிரச்னை. போலீசாரின் குடும்பங்களின் நலன் முக்கியமானவை. எனவே, அவர்களின் நலனுக்காக திட்டங்கள் தேவைப்படுகின்றன. நாட்டின் பாதுகாப்பிற்கு நல்லதொரு உளவு அமைப்பு அவசியமாகிறது.
ஸ்மார்ட் போலீஸ் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து யோசனை செய்து வருகிறேன். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கு அதற்கென ஒரு இணைய தளத்தை பெற்றிருக்க வேண்டும் என்பது எனது திட்டம். அவற்றில், போலீசாரின் தியாகங்கள் குறிப்பிடப்பட வேண்டும். இது, போலீஸ் குறித்த மக்களின் எண்ணங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். போலீஸ் நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டியது அவசியம். எனத் தெரிவித்தார்.
மேலும், சினிமா தொடர்பாக பேசும் போது, ‘சினிமா, போலீசாரை மிக மோசமாக சித்தரித்து காட்டுகின்றன. சாதாரண மக்களிடம், போலீஸ் குறித்த எண்ணத்தை சினிமா மோசமாக்கி வருகிறது. ஒரு சில தவறுகள் இருக்கலாம். அதைமட்டுமே ஹைலைட்டாக்குவது ஏன் என்று புரியவில்லை. இது குறித்து திரைப்படங்களை உருவாக்குபவர்களிடம் பேச வேண்டும். அதேநேரத்தில், போலீசாரும், குறைகள் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும்,' என இவ்வாறு மோடி குறிப்பிட்டார்.
-
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications