ஐயோ, ராமா.. என்னை யாருக்கு ஞாபகம் இருக்கும்?.. மோடியை விமர்சிக்கும் தேவ கவுடா.. காரணத்தை பாருங்க!
அசாமில் திறக்கப்பட்ட போகிபீல் பாலத்தின் திறப்பு விழாவிற்கு முன்னாள் பிரதமர் தேவ கவுடா அழைக்கப்படாதது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video

ஹவுகாத்தி: அசாமில் திறக்கப்பட்ட போகிபீல் பாலத்தின் திறப்பு விழாவிற்கு முன்னாள் பிரதமர் தேவ கவுடா அழைக்கப்படாதது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அசாமில் திறக்கப்பட்ட போகிபீல் பாலம் ஆசியாவிலேயே நீளமான இரண்டாவது நீளமான ரயில் பாலம் ஆகும். பிரதமர் மோடி நேற்று இந்த பாலத்தை திறந்து வைத்தார்.
இந்த பாலத்தின் திறப்பு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த பாலம் பிரம்மபுத்திரா நதியின் மேலே சுமார் 4.94 கி.மீ நீளம் செல்கிறது. 5,920 கோடி ரூபாய் மதிப்பீட்டில் போகிபீல் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏன் முக்கியம்
1997 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் எச்.டி. தேவ் கவுடா போகிபீல் பாலத்திற்கு அதற்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, 2002 ஆம் ஆண்டில் போகிபீல் பாலம் கட்டுமானம் தொடங்கப்பட்டது. பின் மன்மோகன் சிங் ஆட்சி காலத்திலும் கட்டுமானம் நடந்தது.

திறக்கப்பட்டது
இந்த நிலையில் நேற்று 21 வருடத்திற்கு பின் நேற்றுதான் இந்த பாலம் திறக்கப்பட்டது. பிரதமர் மோடி இந்த பாலத்தை திறந்து வைத்தார். ஆனால் இந்த பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய முன்னாள் பிரதமர் தேவ கவுடா இந்த திறப்பு விழாவிற்கு அழைக்கப்படவில்லை.

மிக மோசம்
பிரதமர் மோடியின் இந்த செயல் பெரிய விவாதத்தை எழுப்பியுள்ளது. என்னதான் இருந்தாலும் மோடி இப்படி நடந்து இருக்க கூடாது, மோடியின் செயல் ஏற்றுக்கொள்ள கூடியது கிடையாது என்று மக்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.

நியாபகம் இல்லை
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தேவ கவுடா, காஷ்மீருக்கு ரயில், டெல்லி மெட்ரோ, போகி பீல் ரயில் பாலம் ஆகியவை நான் தொடங்கிய திட்டங்கள். நான் பிரதமராக இருந்த போது கொண்டு வந்த திட்டங்கள். இதற்காக பலர் உழைத்து இருக்கிறார்கள். ஆனால் மக்கள் எல்லாவற்றையும் தற்போது மறந்துவிட்டனர்.

ஐயோ ராமா
ஐயோ ராமா என்னை யாருக்கும் ஞாபகம் இல்லை. என்ன செய்வது. எனக்கு இந்த விழாவிற்கு அழைப்பிதழ் கூட வரவில்லை. எதோ சில செய்தி சேனல்கள், பத்திரிகைகள் மட்டும் என் பெயரை கூறியது என்று கூறியுள்ளார். இவரின் இந்த பேட்டி பெரிய வைரலாகி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications