இந்தியா வருகிறார் ஒபாமா! குடியரசு தின விழா தலைமை விருந்தினராக பங்கேற்க மோடி அழைப்பு!!
டெல்லி: குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்க வருகை தருமாறு அமெரிக்கா அதிபர் ஒபாமாவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்கா அதிபர் ஒபாமா கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்தியா வருகை தந்திருந்தார். நாட்டின் பிரதமராக பங்கேற்ற பின்னர் ஒபாமாவை அமெரிக்காவில் சந்தித்து பேசியிருந்தார் பிரதமர் மோடி.
This Republic Day, we hope to have a friend over…invited President Obama to be the 1st US President to grace the occasion as Chief Guest.
— Narendra Modi (@narendramodi) November 21, 2014
அதன் பின்னர் பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு அவ்வப்போது பாராட்டு தெரிவித்து வந்தார் ஒபாமா. இந்த நிலையில் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், வரும் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தின விழாவின் தலைமை விருந்தினராக அமெரிக்கா அதிபர் ஒபாமாவை எதிர்பார்த்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்கா அதிபர் ஒருவர் குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்வது இதுவே முதல் முறை என்றும் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.