ரேஸ் கோர்ஸ் பங்களாவில் ஆஸ்தான சமையல்காரருடன் குடியேறும் மோடி!
டெல்லி: இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் மோடி ரேஸ் கோர்ஸ் இல்லத்திற்கு செல்லும்போது, அவரின் ஆஸ்தான சமையல்காரராக ஏற்கனவே பணிபுரிந்த பத்ரி என்பவரே நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.
மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த போது பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள 7 ஆம் எண் பங்களாவில் வசித்து வந்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பங்களா புதிய பிரதமரான நரேந்திர மோடிக்கு ஒதுக்கப்பட்டது.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி இன்னும் குஜராத் பவனில்தான் வசித்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு ஒதுக்கப்பட்ட ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள புதிய பங்களாவில் இன்று குடியேறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமரின் அதிகரப்பூர்வ இல்லத்தில், குடும்ப உறுப்பினர்கள் இல்லாமல் வசிக்க உள்ள முதல் பிரதமர் மோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இருந்த அனைத்து பிரதமர்களும் தங்கள் குடும்பத்தினர்கள் அல்லது தனது உறவினர்களுடனாவது வசித்து வந்தனர்.
ஆனால் மோடி தன்னுடன் சிறிய ஒரு குழுவையே அழைத்து வருகிறார். அதில் மோடியின் தனிப்பட்ட சமையல்காரராக சுமார் 12 வருடங்களாக பணியாற்றும் பத்ரி என்பவரும் உடன் செல்கிறார்.












Click it and Unblock the Notifications