ஓய்வூதியம் பற்றி அறிவித்த மோடி: மகிழ்ச்சியில் முன்னாள் ராணுவ வீரர்கள்
டெல்லி: முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம்(ஒன் ரேங்க் ஒன் பென்ஷன்) விரைவில் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மான் கி பாத் என்ற பெயரில் ரேடியோவில் உரையாற்றி வருகின்றார். இந்நிலையில் அவர் இன்று மான் கி பாத் உரையின்போது முன்னாள் ராணுவ வீரர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஓய்வூதிய திட்டம் குறித்து அறிவித்துள்ளார்.
மோடி இன்றைய உரையில் கூறியிருப்பதாவது,

ராணுவ வீரர்கள்
ராணுவ வீரர்களின் பணியை பாராட்டுகிறேன். அவர்களுடன் பேசி வருவதால் அவர்களின் பிரச்சனைகள் குறித்து எனக்கு தெரியும். நான் அவர்களிடம் ஒரு பிரதமராக இல்லாமல் சாதாரண மனிதராக பேசிக் கொண்டிருக்கிறேன்.

ஓய்வூதியம்
ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றும். இந்த திட்டம் 40 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்று கூறப்படுவதில் உண்மை இல்லை. இந்த திட்டத்தை முன்பு இருந்த அரசு நிறைவேற்றவில்லை. இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்துள்ளனர்.

மத்திய அரசு
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு செய்ததை பற்றி பலரும் விமர்சித்துள்ளனர். மத்திய அரசின் சாதனைகளை பலர் பாராட்டியுள்ளனர்.

மாணவர்கள்
சிபிஎஸ்இ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்ச்சி பெறாதவர்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம். வாழக்கையில் வெற்றி, தோல்வி என்பது ஒரு பகுதி. தோல்வியில் இருந்து நிறைய கற்றுக் கொள்ளலாம்.

கிஸான் டிவி
விவசாயிகளுக்காக கிஸான் டிவியை துவங்கி வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அந்த டிவி சேனல் ஒரு திறந்தவெளி பல்கலைக்கழகம். கிஸான் டிவியில் ஆசிரியரும், மாணவரும் விவசாயிகள் தான் என்றார் மோடி.












Click it and Unblock the Notifications