சகிப்புத்தன்மைதான் இந்தியாவின் பலம்: மோடி அரசை விமர்சித்து லோக்சபாவில் ராகுல் காந்தி பேச்சு
டெல்லி: சகிப்புத்தன்மை குறித்த விவாதத்தில் ராகுல் காந்தி பேசினார். சகிப்புத்தன்மைதான் இந்தியாவின் மிகப்பெரிய பலம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
சகிப்புத்தன்மை குறித்த விவாதம் நேற்று லோக்சபாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மார்சிஸ்ட் கட்சி எம்.பி சலீம், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பற்றி தெரிவித்த கருத்து அமளியை ஏற்படுத்தியதால் அலுவல் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை முதல் கேள்வி நேரம் நடைபெற்றது. மதியம், மீண்டும் சகிப்பின்மை விவாதம் தொடங்கியது. சசி தரூர் போன்ற பல எம்.பிக்கள் சகிப்பின்மை பற்றி பேசிய பிறகு மாலையில், ராகுல் காந்தி பேசினார். அவர் பேசியதாவது: தலித்துகளை நாய்களோடு ஒப்பிட்ட அமைச்சர் வி.கே.சிங் போன்றோர் பதவியில் தொடர மோடி அனுமதித்துள்ளார்.
ஒரு முஸ்லிம் நபர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை காப்பாற்றும் உச்ச பொறுப்பில் இருக்கும் பிரதமரோ அதுபற்றி வாய் திறக்கவில்லை.
கலவரங்கள் திட்டமிட்டு, உருவாக்கப்படுவதாக அருண் ஜெட்லி கூறியிருந்தார். இது ஒன்றும் மேக் இன் இந்தியா போல கனவு கிடையாது. நிஜத்தில் நடப்பதைதான் சொல்கிறோம். யாராவது போராடினாலே உடனே அவர்கள் மீது தேச துரோக வழக்கு பாய்கிறது. குஜராத் மாடல் நிர்வாகம் என்ற பலூன் தற்போது வெடித்து சிதறிவிட்டது. பட்டேல்கள் போராட்டம் அதை அம்பலப்படுத்திவிட்டது.
பாகிஸ்தானின் பலவீனமே, சகிப்பின்மைதான். நமது பலவீனம், சகிப்புத்தன்மைதான். பாகிஸ்தான் அந்த நாட்டு மக்கள் கருத்துக்களை கேட்பதில்லை. ஆனால், இந்தியாவில் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்தாக வேண்டும். ஒரு சார்பாக இருப்பதை நிறுத்தாதவரை நாம் வளர முடியாது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பதில் கூறினார்.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications