கோவாவில் கோலாகலம்.. தேசிய விளையாட்டு போட்டிகளை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
கோவா: இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று கோவாவில் தொடங்குகின்றன. இந்த போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைக்கிறார்.
நாளை காலை மகாராஷ்டிரா மாநிலம் செல்லும் பிரதமர் மோடி அங்கு 86 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறும் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதன் தொடர்ச்சியாக ஷீரடியில் புகழ்பெற்ற ஸ்ரீ சாய்பாபா கோவிலில் தரிசனம் செய்கிறார். அங்கு ஏற்கெனவே பல்வேறு நலத்திட்டங்கள் முடிவுற்றுள்ளன. அவற்றையும் பிரதமர் பக்தர்களுக்கு அர்ப்பணிக்கிறார். குறிப்பாக கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் வருகை அதிகரித்துக்கொண்டே இருப்பதால் அதற்கேற்றார் போல புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் புதிய தரிசன வரிசை வளாகம். இது பிரதமரால் திறந்து வைக்கப்படுகிறது.

இந்த வளாகத்தில் ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பக்தர்கள் வரை தங்க முடியும். அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடம் பல்வேறு அரங்குகளை கொண்டிருகிறது. இதற்கு பிரதமர் மோடிதான் கடந்த 2018ம் ஆண்டு அடிக்கல் நாட்டியிருந்தார். இதனைத்தொடர்ந்து 182 கிராமங்களுக்கு குழாய் மூலம் தண்ணீரை கொண்டு சேர்க்கும் விதமாக உருவாக்கப்பட்ட 85 கிமீ நீளமுள்ள கால்வாய் வலையமைப்பையும் பிரதமர் விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கிறார். இது தவிர அகமதுநகர் சிவில் மருத்துவமனையில் ஆயுஷ் மருத்துவமனை, குர்துவாடி-லத்தூர் சாலை ரயில் பாதை (186 கிமீ) மின்மயமாக்கல், NH-166 இன் சாங்கிலி முதல் போர்கான் வரை நான்கு வழிப்பாதை (பேக்கேஜ்-I) போன்ற திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.
அங்கிருந்து கோவா வரும் அவர் 37வது தேசிய விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார். கோவாவில் தேசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது இதுவே முதல்முறை. தேசிய விளையாட்டு போட்டிகள் என்பது மத்திய அரசு மற்றும் இந்தியன் ஒலிம்பிக் சங்கத்தின் நேரடி பார்வையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். இன்று தொடங்கும் 37வது தேசிய விளையாட்டு போட்டிகள் நவம்பர் மாதம் 9ம் தேதி வரை நீடிக்கிறது. 28 மைதானங்களில் 43 போட்டிகள் மொத்தம் நடத்தப்படுகின்றன. இதில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications