காஷ்மீரில் மீட்டிங்.. வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பங்கேற்கும் மோடி.. ஏனென்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க
காஷ்மீரில் பதட்டமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றில் பேச உள்ளார்.
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பதட்டமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றில் பேச உள்ளார். ஆனால் இது பாகிஸ்தான் பிரச்சனை தொடர்பான மீட்டிங் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா பாகிஸ்தான் இடையே மிக கடுமையான பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. எப்போது வேண்டுமானாலும் போர் உருவாகலாம் என்ற நிலை இரண்டு நாடுகளுக்கு இடையில் உருவாகி உள்ளது.
இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிறைப்பட்டு இருப்பதால் இந்த சூடு இன்னும் அதிகம் ஆகியுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி காஷ்மீரில் முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்துகிறார்.
[Read more: போர்ப் பதட்டத்தைக் காரணம் காட்டி தேர்தலை தள்ளிப் போடுவார்களா?]

இன்னொரு பக்கம்
என்னதான் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடுமையான சண்டை நிகழ்ந்து கொண்டு இருந்தாலும், பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் ஒருபக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பிரதமர் மோடி தொடங்கி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரை ஆங்காங்கே பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தேர்தல் ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.

மோடி காஷ்மீரில்
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று காஷ்மீரில் நடக்கும் கட்சி கூட்டம் ஒன்றில் கலந்து கொள்கிறார். இன்னும் சற்று நேரத்தில் அந்த கூட்டம் நடக்கிறது. அதில் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்து கொண்டு சில மணி நேரம் பேச உள்ளார்.
|
என்ன காரணம்
இந்த சந்திப்பிற்கும் காஷ்மீர் பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. இது முழுக்க முழுக்க தேர்தல் ஆலோசனை ஆகும். ''என்னுடைய வாக்குசாவடியே பலமான வாக்குசாவடி'' என்ற தலைப்பில் காஷ்மீரில் வாக்குச்சாவடி வாரியாக பாஜகவை பலபடுத்துவது எப்படி என்று இதில் பாஜகவினர் ஆலோசிக்க உள்ளனர். இதில்தான் தற்போது மோடி பேச உள்ளார்.

பெரிய மோசம்
ஆனால் பிரதமர் மோடி இப்போது வரை காஷ்மீர் தாக்குதல் தொடர்பாக இன்னும் அனைத்து கட்சி கூட்டம் நடத்தவில்லை. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் போல அறிக்கையோ, டிவியில் தோன்றி பேட்டியோ கொடுக்கவில்லை. மாறாக தேர்தல் தொடர்பான பணிகளில் மிக கவனமாக செயல்பட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications