சீனா பற்றி மாலை 6 மணிக்கு மோடி ஒருவார்த்தை கூட பேசமாட்டாருன்னு உறுதியாக சொல்றேன்... ராகுல் அட்டாக்
வயநாடு: நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு உரையாற்றும் பிரதமர் மோடி சீனா குறித்து எதுவுமே பேசமாட்டார் என உறுதியாக தாம் சொல்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு தாம் உரையாற்றப் போவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். முக்கியமான செய்திகளை மக்களிடம் பகிர்ந்து கொள்ளப் போவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு குறித்து?
பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி பொது இடங்களில் கூடி வருகின்றனர். இதனால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்குவார் என கூறப்படுகிறது.

ராகுல் சொல்வது என்ன?
இதனிடையே கேரளாவின் வயநாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இது தொடர்பாக கூறியதாவது: இந்திய நிலப்பகுதியை ஆக்கிரமித்திருக்கும் சீனா எப்போது வெளியேறும் என்பதை பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும்.

சீனா பற்றி சொல்லமாட்டார் மோடி
இதேபோல் தமது நாட்டின் நிலப் பகுதியை அண்டை நாடு ஆக்கிரமித்திருக்கும் நிலையில் ஒரு பிரதமர் பேசாமல் இருப்பது என்பது உலகில் வேறு எந்த ஒருநாட்டிலும் நடக்காது. பிரதமர் மோடி இதுபற்றி பேசியாக வேண்டும். ஆனால் இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடையே பேசும் மோடி இது குறித்து எல்லாம் பேசப்போவதில்லை என்பதுமட்டும் உறுதி.

கமல்நாத் சர்ச்சை
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், ஐட்டம் என பாஜக தலைவரை விமர்சித்தது பேசியது ஏற்புடையது அல்ல. துரதிருஷ்டவசமானது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார். ஆனால் தாம் பேசியதன் பின்னணி குறித்து விளக்கிவிட்டதால் மன்னிப்பு கேட்க முடியாது. ராகுல் காந்தி சொந்த கருத்தை கூறியுள்ளார் என கமல்நாத் பதில் கொடுத்திருக்கிறார்.
-
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications