Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேச ஒற்றுமைக்கு எதிராக தாக்குதல் நடத்த சிலர் முயற்சி: ராகுல் காந்தி மீது பிரதமர் மோடி மறைமுக தாக்கு!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: தேசத்தின் ஒற்றுமைக்கு எதிராக தாக்குதல் நடத்த சிலர் முயற்சிகளை மேற்கொள்வதாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் பிரதமர் நரேந்திர மோடி மறைமுகமாக விமர்சித்தார். மேலும் அதிகாரப் பசி கொண்ட மக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இந்தியாவை துண்டு துண்டாக உடைக்க விரும்புகிறார்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி சாடினார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நாட்டின் முதலாவது வந்தே மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்டவைகளை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: எமது மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் 100 நாட்கள் அனைவருக்கும் பயனுள்ள அபிவிருத்தியைக் கொண்டு வந்துள்ளது. 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியோருக்கும் ரூ .5 லட்சம் மதிப்புள்ள இலவச சிகிச்சையை வழங்குவதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஆரோக்கியம் குறித்து எடுக்கப்பட்ட பெரிய முடிவு ஆகும். நமோ பாரத் துரித ரயில் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு நிறைய வசதிகளை வழங்கப் போகிறது. இந்த 100 நாட்களில் வந்தே பாரத் கட்டமைப்பின் விரிவாக்கம் இதுவரை இல்லாதது. இது இந்தியாவுக்கான நேரம், இது இந்தியாவின் பொற்காலம், இது இந்தியாவின் அமிர்த காலம்.

narendra modi rahul gandhi

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தங்கள் நாட்டின் வலிமையை மேம்படுத்தும் பணியில் ஈடுபடுவதன் மூலம், முழு உலகிலும் இந்தியாவின் விளம்பரத் தூதராக மாற விரும்புகிறார்கள். இன்னொரு பக்கம், நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக தாக்குதல் நடத்துகின்றனர். 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைத்து சர்தார் படேல் இந்தியாவை ஒருங்கிணைத்தார். ஆனால் அதிகாரப் பசி கொண்ட மக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இந்தியாவை துண்டு துண்டாக உடைக்க விரும்புகிறார்கள். குஜராத் மக்கள் இதுபோன்ற பிளவுபடுத்தும் சக்திகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் எச்சரித்தார்.

அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த ராகுல் காந்தி, சீக்கியர்களின் உரிமைக்கு ஆதரவாக பேசினார். இதனால் இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனிநாடு கோரும் காலிஸ்தான் அமைப்பின் தலைவர் பன்னூன் உள்ளிட்டோர் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்தது சர்சசையாகி இருந்தது. இந்த பின்னணியில் ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+