பூடானில் 2 நாட்கள் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்
டெல்லி: பிரதமரான பிறகு முதலாவது வெளிநாட்டு சுற்றுப்பயணமாக பூடான் செல்லும், நரேந்திரமோடி இரு நாள் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
நரேந்தரிமோடி இந்திய பிரதமராக கடந்த மாதம் 26ம்தேதி பதவியேற்றார். அதில் சார்க்நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். பதவியேற்பு விழாவுக்கு வந்திருந்த பூடான் பிரதமர் ஷெரிங் தோப்ஹய், மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அப்போது தனது நாட்டுக்கு வருமாறு மோடிக்கு அழைப்புவிடுத்தார். சார்க் நாடுகளின் தலைவர்கள் அனைவருமே தங்கள் நாட்டுக்கு மோடி வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் பூடான் செல்ல மோடி முடிவு செய்துள்ளார். வரும் 15, 16 ஆகிய தேதிகளில் பூடான் நாட்டில் மோடி சுற்றுப்பயமம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு செல்லும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும். பூடான் பயணத்துக்கு பிறகு அடுத்த மாதம் ஜப்பானுக்கு பிரதமர் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அதன்பிறகு பிரேசிலில் நடைபெறும் 'பிரிக்ஸ்' கூட்டத்தில் அவர் பங்கேற்பார்.












Click it and Unblock the Notifications