அயோத்தி சர்ச்சையை அரசியலாக்கியது காங்கிரஸ்தான் காரணம்- பிரதமர் நரேந்திர மோடி
Recommended Video
தல்தோன்கஞ்ச்: அயோத்தி பிரச்சினை சர்ச்சையானதற்கு காங்கிரஸ்தான் காரணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு தல்தோன்கஞ்ச் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அவர் பேசுகையில் ஜார்க்கண்ட் மாநிலம் பாஜகவின் வலுவான கோட்டையாக விளங்குகிறது.
இன்று நாடு முழுவதும் தாமரை மலர்கிறது என்றால் அதற்கு இங்குள்ள மக்களும் கட்சி தொண்டர்களும்தான் காரணம். அவர்களின் ஆசியும்தான். மக்களும் தாமரையின் பக்கம் நிற்கிறார்கள்.
பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்தது ஜார்கண்டிற்கு மிக முக்கியமானது. வலிமையான, நிலையான அரசு இங்கு அமைக்க முடிந்தது. பாஜகவின் முயற்சியால் இந்த மாநிலம் நக்சல் இல்லாத மாநிலமாக மாறி இருப்பத்துடன் அமைதியான சூழலும் இங்கு நிலவுகிறது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு.. அணை பாதுகாப்பு சட்டம் இப்போது இல்லை
நக்ஸலிசத்தால் இங்கு நிலையான ஆட்சி அமையால் இருந்ததற்கு காரணம். ராம ஜென்ம பூமி விவகாரம் சர்ச்சை காங்கிரஸ் கட்சியால் ஏற்படுத்தப்பட்டது. இந்த பிரச்சினைக்கு ஆரம்பத்திலேயே காங்கிரஸ் கட்சி தீர்வு கண்டிருக்கலாம். அவர்கள் வாக்கு வங்கியில் மட்டுமே அக்கறையுடன் இருந்தனர். அந்த எண்ணம்தான் நாட்டை சீரழித்துவிட்டது என மோடி பிரசாரத்தில் பேசினார்.