விவசாயி தற்கொலை விவகாரம்: மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் அவசர ஆலோசனை
டெல்லி: டெல்லியில் விவசாயி கஜேந்திரசிங் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.
நில ஆர்ஜித மசோதாவுக்கு எதிராக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பிரமாண்ட பேரணி நேற்று நடைபெற்றது. இந்த பேரணியின் போது திடீரென ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி கஜேந்திரசிங் ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் எதிர்க்கட்சியினர் இந்த விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் விவசாயி தற்கொலை செய்து கொண்டது குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத்சிங், வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆம் ஆத்மி பேரணியில் நடந்தது என்ன என்பது குறித்து பிரதமர் மோடியிடம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விவரித்தார். இந்த பிரச்சனையை எவ்வாறு அணுகுவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications