மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக நரேந்திர மோதி அறிவிப்பு
இந்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் நரேந்திர மோதி அறிவிப்பு.
இந்த சட்டத்தைத் திரும்பப்பெறவேண்டும் என்று கோரிதான் டெல்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக போராடிவருகின்றனர்.
https://twitter.com/ANI/status/1461543939735838722
இம்மாதம் தொடங்கப்பட உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில், மூன்று வேளாண் சட்ட மசோதாக்களையும் ரத்து செய்ய நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்.
விவசாயிகள் வீடு திரும்புமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். நாம் மீண்டும் புதிதாகத் தொடங்குவோம் என இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறியதாக ஏ என் ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.
https://twitter.com/ANI/status/1461544012351868934
நான் என்ன செய்தேனோ அது விவசாயிகளுக்காகத் தான் செய்தேன். நான் செய்வது நாட்டுக்காகத் தான். உங்கள் ஆசிகளில், நான் என் கடின உஅழைப்பில் எதையும் விடவில்லை.
உங்கள் கனவு மற்றும் தேசத்தின் கனவை நனவாக்க, நான் இன்னும் கடினமாக உழைப்பேன் என உறுதி கூறுகிறேன் என நரேந்திர மோதி கூறியதாக ஏ.என்.ஐ முகமையில் கூறப்பட்டுள்ளது.(இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. மேலதிக விவரங்களுக்கு இணைந்திருங்கள்.)
பிற செய்திகள்:
- இனவெறி சர்ச்சையால் அதிரும் இங்கிலாந்து கிரிக்கெட் - நடப்பது என்ன?
- ஐபிஎம் வெளியிட்ட அதிவேக குவாண்டம் பிராசசர் செய்யப் போவது என்ன?
- கள்ளக்குறிச்சியில் கைதான குறவர்களில் ஒருவருக்கு நெஞ்சுவலி என மருத்துவமனையில் அனுமதி
- தோலும் தோலும் உரசாவிட்டால் பாலியல் குற்றமில்லை என்ற தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்
- சௌரவ் கிர்பால்: இந்தியாவின் முதல் தன்பாலின ஈர்ப்பு கொண்ட நீதிபதி
- குஜராத்தில் அசைவ உணவு கடைகள் தொடர்பான சர்ச்சை: பாஜக சொல்வது என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













Click it and Unblock the Notifications