இது நம்பிக்கையில்லா தீர்மானம் அல்ல.. எதிர்க்கட்சிகளின் ஆணவத்தின் வெளிப்பாடு- பிரதமர்
இது நம்பிக்கையில்லா தீர்மானம் அல்ல, எதிர்க்கட்சிகளின் ஆணவத்தின் வெளிப்பாடு என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
டெல்லி: எதிர்க்கட்சிகள் எங்களுக்கு எதிராக கொண்டு வந்தது நம்பிக்கையில்லா தீர்மானம் அல்ல, அவர்களின் ஆணவத்தின் வெளிப்பாடு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் பதில் அளித்துவருகிறார். அப்போது அவர் கூறுகையில் நம்பிக்கையில்லா தீர்மானம் எதிர்க்கட்சிகளின் இயலாமையை எடுத்து காட்டிவிட்டது.

நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானவர்களை நம்பிக்கையில்லா தீர்மானம் காட்டி கொடுத்துவிட்டது. என்னை பிரதமர் பதவியில் அமரவைத்தது 125 கோடி மக்கள்தான். அவர்களின் ஆசிர்வாதம் எனக்கு எப்போதும் உண்டு.
அதிகார பசியின் காரணமாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகொண்டு வந்தனர். இது நம்பிக்கையில்லா தீர்மானம் அல்ல, எதிர்க்கட்சியின் ஆணவத்தின் வெளிப்பாடு ஆகும். எதிர்கட்சிகள் எதிர்மறை அரசியல் செய்கின்றனர்.
நிறைய பேருக்கு தான் பிரதமர் ஆக ஆசையிருக்கிறது. பெரும்பான்மையில்லாத நிலையிலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோருகின்றனர். எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்.
பெரும்பான்மை யில்லா தநிலையிலும் வாக்கெடுப்பு
பிரதமர் கனவை நிறைநேற்ற ராகுல் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கிறார். நாட்டுக்கு வளர்ச்சி வேண்டாம் என எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. அதனால்தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை திணித்துள்ளன. நாடு முழுவதும் மின்சாரம் கிடைத்துள்ளது. ஏழை, பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் மின்சாரம் கிடைத்துள்ளது என்றார் மோடி.












Click it and Unblock the Notifications