டெல்லி டிராபிக்கில் சிக்கிய மோடி... 3 மணி நேரம் தாமதமாக வீடு போய் சேர்ந்தார்!
டெல்லி: பத்து நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு நேற்று டெல்லி திரும்பிய மோடி, இந்திராகாந்தி விமான நிலையத்தில் இருந்து தனது இல்லத்திற்கு செல்ல, போக்குவரத்து நெரிசல் காரணமாக சுமார் மூன்று மணி நேர தாமதம் ஏற்பட்டதாம்.
மூன்று நாடுகளில் பத்து நாட்கள் சுற்றுப் பயணத்தை முடித்த பிரதமர் மோடி நேற்று காலை டெல்லி திரும்பினார். இந்திராகாந்தி விமான நிலையத்திலிருந்து அவரது இல்லத்திற்கு செல்ல வழக்கமாக ஐந்து நிமிடங்கள் தான் ஆகும்.

ஆனால், நேற்று பிரதமரின் இல்லத்திற்கு செல்லும் பாதையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசாரின் கடுமையான முயற்சிக்குப் பிறகே போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்பட்டுள்ளது.
இதனால், 5 நிமிடத்தில் வீடு சென்று சேர வேண்டிய மோடி, கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் தாமதமாக சென்றுள்ளார்.
இது தொடர்பாக, அப்பகுதி போக்குவரத்து போலீசார் கூறுகையில், ‘பிரதமர் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, போக்குவரத்தும் சரி செய்யப்பட்டிருந்தது. ஆனால் காலை நேரம் என்பதால் வழக்கமான போக்குவரத்து நெரிசல் நேற்று எதிர்பாராத வகையில் அதிக அளவில் இருந்தது' எனத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications