காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து பிரதமர் உரிய முடிவு எடுப்பார்: வி.நாராயணசாமி
டெல்லி: காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பது குறித்து பிரதமர் உரிய முடிவு எடுப்பார் என மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்து விடுதலை பெற்ற நாடுகளின் கூட்டமைப்பு காமன்வெல்த் அமைப்பு ஆகும். இதன் மாநாடு, நவம்பர் 15ம் தேதி தொடங்கி 17ந்தேதி வரை இலங்கையில் கொழும்பு நகரில் நடை பெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு பின்னர் காமன்வெல்த் அமைப்பின் தலைவர் பொறுப்பு, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு வரும்.

இந்தத் தலைவர் பொறுப்பு ராஜபக்சேவுக்கு பாதுகாப்பு கவசமாக அமைந்து விட வாய்ப்புள்ளது. அதன் மூலம், இலங்கை உள்நாட்டுப் போர் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தின் போர்க்குற்ற விசாரணையையில் இருந்து ராஜபக்சே தப்பி விட ஏதுவாகலாம்.
எனவே இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நிர்ப்பந்தங்கள் அதிகரித்து வருகின்றன. நேற்று இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகளும் ஓரணியில் கைகோர்த்து நின்று தீர்மானம் நிறைவேற்றியது.
இந்நிலையில் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர் நாராயணசாமியிடம் கேட்கப் பட்டபோது, "காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதால் ஏற்படுகிற சாதக, பாதகங்களை பிரதமர் மன்மோகன்சிங் ஆராய்ந்து, உரிய முடிவை எடுப்பார். கொழும்பில் நடக்கிற காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது குறித்து முடிவு எடுப்பதற்கு இன்னும் அவகாசம் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்ற தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கை பற்றி கூறும்போது, ‘இலங்கையில் வாழுகிற தமிழ் மக்களின் நிலை குறித்து தமிழக அரசியல் கட்சிகள் எழுப்பியுள்ள கவலையை இலங்கை அரசு தணிக்க வேண்டும். இதில் இலங்கை அரசு சாதகமான பதிலை அளிக்க வேண்டும்' என பதில் அளித்தார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications