For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியாவின் அங்கமாகும்: யோகி ஆதித்யநாத்

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியாவின் அங்கமாகும் என்று பாஜக எம்.பி, யோகி ஆதித்யநா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜமாத் உத் தாவா இயக்கத்தின் ஹசீப் சயீத் அண்மையில் பாகிஸ்தானில் நடத்திய ஒரு பேரணியில் பேசுகையில், பாகிஸ்தான் அரசு ராணுவ வீரர்களை காஷ்மீருக்கு அனுப்பிவைக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

PoK will soon be a part of India, says Yogi Adityanath

இது குறித்து கோரக்பூர் தொகுதி பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் கூறியதாவது:

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியாவின் அங்கமாகும். பாகிஸ்தான் இந்தியாவுடன் மோத நினைத்தால் அதன் இருப்புக்கு அபாயம் ஏற்படும்.

இந்தியாவிடம் காஷ்மீர் 4 முறை தோல்வியடைந்துள்ளது. காஷ்மீர் பிரச்சினைக்கு காங்கிரஸ் கட்சியினரே பொறுப்பாவர்.

ஒருவேளை நேருவுக்குப் பதிலாக சர்தார் படேல் பிரதமராகியிருந்தால் காஷ்மீர் பிரச்சினையே எழுந்திருக்காது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விடுதலையடையும் நேரம் வந்துவிட்டது.

இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.

English summary
BJP MP Yogi Adityanath has said if the neighbouring country dares to fight with India, its existence would be in danger and that Pak-occupied Kashmir (PoK) would soon be a part of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X