ஜெயலலிதா அன்ட் கோவுக்கு நேற்றே சிறையை தயார் செய்த பெங்களூர் போலீசார்
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை அடைக்க பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர்களுக்காக நேற்றே அறைகளை போலீசார் தயார் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கடந்த 18 ஆண்டுகளாக நடந்த வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், மற்ற 3 பேருக்கு தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தீர்ப்பு இன்று தான் அளிக்கப்பட்டது. அப்படி இருக்கையில் அந்த 4 பேரையும் அடைப்பதற்கான அறைகள் நேற்றே தயார் செய்து வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது பண்டிகை காலம் என்பதால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications