பெண்ணை பலாத்காரம் செய்த மகன்.. மறைந்து நின்று வீடியோ எடுத்த தாய்.. சத்தீஷ்கரில் கொடுமை!
இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் தாய் - மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்
Recommended Video
ராய்ப்பூர்: இளம் பெண்ணை பலாத்காரம் செய்தது மகன்.. இதனை மறைந்து நின்று வீடியோ எடுத்தது பெற்ற தாய்.. இந்த கன்றாவி சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது.
அந்த பெண்ணுக்கு வயசு 19... இளைஞன் மீது தீராத காதல். இளைஞனும் பெண்ணை வளைச்சு வளைச்சு காதலிக்கிறான்.
ஒருநாள் அந்த பெண்ணை தன் வீட்டுக்கு வருமாறு அழைக்கவும், நம்பி கூடவே செல்கிறாள். வீட்டுக்கு வந்த பெண்ணை பார்த்ததும் இளைஞனின் அம்மா கட்டி அணைத்து கொள்கிறார்.

மயக்க மருந்து
பெண்ணை உள்ளே அழைத்து சென்று, உட்கார வைத்து, முதல்முறையா வீட்டுக்கு வந்திருக்கே என்று சொல்லி ஸ்வீட் தருகிறார். இளம்பெண்ணும் மயக்க மருந்து கலந்த அந்த ஸ்வீட்டை வாங்கி சாப்பிட, கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மயங்கி விழுகிறார் இளம்பெண்.

வீடியோ
இதற்கு பிறகுதான் அந்த பயங்கரம் நடந்தது. அந்த பெண்ணை இளைஞர் பலாத்காரம் செய்ய ஆரம்பிக்கிறார்.. இதனை அம்மா வீடியோ எடுத்துள்ளார். கொஞ்ச நேரம் கழித்து, மயக்கம் தெளிந்து எழுந்து உட்கார்ந்தால் இளைஞனின் அக்காவும், அக்கா வீட்டுக்காரரும் நின்று கொண்டிருக்கிறார்கள். பிறகு வீடியோ பெண்ணிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

மிரட்டல்
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், வெளியில் வீடியோ விஷயம் தெரிந்தால் குடும்ப மானமும், தன் மானமும் போய்விடும் என்று நினைத்து பயந்து வீட்டுக்கு ஓடிவந்துள்ளார். அங்கே நிலத்தை விற்று 4 லட்சம் ரூபாய் பணத்தை வீட்டில் பெண்ணின் அப்பா வைத்திருந்து இருக்கிறார். அதை எடுத்து கொண்டு போய் அந்த கும்பலிடம் தந்துவிட்டார்.

புகார்
வீட்டில் வைத்திருந்த பணம் எங்கே என்று மகளிடம் தந்தை கேட்கவும்தான் நடந்த சம்பவத்தை கதறி கொண்டே சொல்லி இருக்கிறார். இதையடுத்து, ஆத்திரமும், அதிர்ச்சியும் அடைந்த தந்தை உடனடியாக போலீசில் இது குறித்து புகார் தந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் தாயையும்-மகனையும் கைது செய்துள்ளனர். மகன் பலாத்காரம் செய்ததை பெற்ற தாயே வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை தந்துள்ளது.












Click it and Unblock the Notifications