கொல்கத்தா திருமண மண்டபத்தில் ஆபாச பட சூட்டிங்.. இயக்குநர்கள், இசையமைப்பாளர், அழகிகள் கைது
கொல்கத்தா: திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அங்குள்ள பெட்ரூம், பாத்ரூமில் அழகிகளையும், ஆண்களையும் கொண்டு ஆபாச படம் சூட்டிங் எடுத்த 28 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்ட சம்பவம் கொல்கத்தாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவின் புகழ்பெற்ற பகுதிகளில் ஒன்று சால்ட்லேக். இங்குள்ள திஷ்கரி என்ற திருமண மண்டபத்தில் ஆண்கள்-பெண்களை வைத்து ஆபாச பட சூட்டிங் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தி, 7 பெண் மாடல்கள், 5 ஆண் மாடல்கள், 2 'இயக்குநர்கள்', சவுண்ட் எஃபெக்ட் கொடுப்பவர் என மொத்தம் 28 பேரை கைது செய்தனர்.

பாத்ரூம், பெட்ரூம்
திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் சூட்டிங் தொடங்கியுள்ளது. அங்குள்ள பாத்ரூம்கள், பெட்ரூம்களில் வைத்து, ஆண் மாடல்களும், பெண் மாடல்களும் பல்வேறு கோணங்களில் உடலுறவு கொண்டுள்ளனர். அது வீடியோவாக பிடிக்கப்பட்டுள்ளது.

ரூ.75 ஆயிரம் வாடகை
இந்த மண்டபத்தின் உரிமையாளர் தபப்ரதா கோஷ் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவராகும். இவருக்கு ஒருநாள் வாடகையாக ரூ.75 ஆயிரத்தை ஆபாச பட குழு கொடுத்துள்ளது. மேலும், சூட்டிங்கை நேரில் பார்த்து ரசிக்கும் வாய்ப்பும் பரிசாக அவருக்கு தரப்பட்டுள்ளது.

அழகிகளுக்கு ஆயிரம் சம்பளம்
போலீஸ் வட்டாரத் தகவல்படி, ஒரு நாள் முழுவதும் விதவிதமான கோலத்தில், வெவ்வேறு ஆண்களுடன் உடலுறவு கொள்வதற்காக அந்த பெண் மாடல்களுக்கு நாளொன்றுக்கு ரூ.1000 ரேட் பேசப்பட்டிருந்ததாம்.

1 லட்சத்தில் ஒரு படம்
ஆபாச படத்தை சூட் செய்ய, தரம் வாய்ந்த கேமரா நாளொன்றுக்கு ரூ.35 ஆயிரம் விலைகொடுத்து வாடகைக்கு எடுக்கப்பட்டிந்ததாம். ஆகமொத்தம் சுமார் ரூ.1 லட்சத்தில், ஒரு நாள் சூட்டிங் செலவு முடிந்துவிடும் என்கிறது ஆபாச படக்குழு.

பிட்டு, பிட்டாக
கடந்த சில நாட்களாகவே இதுபோன்ற சூட்டிங் தொடர்ந்து நடந்துவந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கிறார்கள். 10 நிமிடங்கள் ஓடக்கூடிய காட்சிகளாக, பிட்டு, பிட்டாக சீன்கள் எடுக்கப்பட்டுள்ளது, அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட டைரி மூலம் தெரியவந்துள்ளதாம்.

உடனடி அப்லோடு
மேலும், சிடியிலோ, கேசட்டிலோ ஆபாச வீடியோ பதிவு செய்யப்படவில்லையாம். உடனடியாக இணையம் மூலமாக, டெல்லியிலுள்ள ராஜா என்பவருக்கு சொந்தமான, ஆடியோ-வீடியோ கடைக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும், அவர் அங்கிருந்து பல ஆபாச இணையதளங்களுக்கு அதை விற்பனை செய்வதாகவும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

ஆவண படம்னு நடிச்சாங்களாம்
ஆபாச இணையதளங்களில் எத்தனை பேர் பார்க்கிறார்களோ, அதற்கேற்ப பணம் பங்கு வைக்கப்பட்டு, ஆபாச பட தயாரிப்பாளர் லாபம் பார்ப்பது வழக்கமாம். இதனிடையே, தங்களை டாக்குமென்ட்டரி படம் எடுப்பதாக கூட்டி வந்ததாகவும், ஸ்பாட்டுக்கு வந்தபிறகே, ஆபாச படம் என தெரிந்ததாகவும் அந்த பெண் மாடல்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications