உ.பியில் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய புலந்த்சாகர் எஸ்.பி. அதிரடி இடமாற்றம்
Recommended Video

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில், புலந்த்சாகர் வன்முறை சம்பவத்தில், அதைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக மாவட்ட எஸ்.பி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை பசுவதையை மையமாக வைத்து மஹாய் என்ற கிராமத்தில் கலவரம் ஏற்பட்டது. அதில், சாய்னா காவல்நிலையத்தின் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் வைத்திருந்த கைத்துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு ஆய்வாளரின் உயிரை பலிவாங்கியதாகக் கூறப்பட்டது. மேலும், 20 வயது இளைஞரும் கலவரத்தில் பலியானார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை ஒரு விபத்து என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த கொலைவழக்கில், கலவரத்தில் ஈடுபட்ட பஜ்ரங் தள் மாவட்ட அமைப்பாளர் யோகேஷ் ராஜ் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், சுபோத்தை அவரது துப்பாக்கியை பிடுங்கி சுட்டது ராணுவ வீரரான ஜீத்து என்பது தெரியவந்தது. ஆனால், இதை ஜூத்துவின் தாயாரான ரத்தன் கவுர் மறுத்துள்ளார்.
கலவரத்தின் போது எடுக்கப்பட்ட பலரது கைப்பேசிகளின் வீடியோ பதிவுகளில் சுபோத்தை ஜீத்து சுடும் காட்சி ஆதாரமாகக் கிடைத்திருப்பதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், கலவரத்தின் போது அஜாக்கிரதையாக இருந்ததாக கூறி, புலந்த்சாகர் மாவட்ட எஸ்பியான கிருஷ்ண பாகதுர் சிங் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான அறிக்கையின் அடிப்படையில் அவரை உளவுத்துறை ஏடிஜி பணியிட மாற்றம் செய்துள்ளார். வன்முறை சம்பவத்தின் போது திறம்பட செயல்பட்டு, கலவரத்தை அடக்க கிருஷ்ண பாகதுர் சிங் தவறி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கலவரத்தின் போது, முன் எச்சரிக்கையாக கூடுதல் பாதுகாப்பு படையையும் குவிக்க தவறி விட்டார் என்றும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், ஏற்கனவே, காவல் அதிகாரி சத்ய பிரகாஷ், மொராதாபாத் காவலர் பயிற்சி பள்ளிக்கு மாற்றப்பட்டு விட்டார். காவலர் சுரேஷ்குமார் என்பவரும் லலித்பூர் பகுதிக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார். தற்போது, காவல்துறை எஸ்பி கிருஷ்ண பாகதுர் சிங் என மொத்தம் 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆளும் பாஜகவுக்கு விவகாரம் தொடர்ந்து நெருக்கடி தந்தால், மேலும் பல தலைகள் உருளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications