உ.பியில் கலவரத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய புலந்த்சாகர் எஸ்.பி. அதிரடி இடமாற்றம்
Recommended Video

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில், புலந்த்சாகர் வன்முறை சம்பவத்தில், அதைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக மாவட்ட எஸ்.பி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த திங்கள்கிழமை பசுவதையை மையமாக வைத்து மஹாய் என்ற கிராமத்தில் கலவரம் ஏற்பட்டது. அதில், சாய்னா காவல்நிலையத்தின் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர் வைத்திருந்த கைத்துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு ஆய்வாளரின் உயிரை பலிவாங்கியதாகக் கூறப்பட்டது. மேலும், 20 வயது இளைஞரும் கலவரத்தில் பலியானார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை ஒரு விபத்து என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த கொலைவழக்கில், கலவரத்தில் ஈடுபட்ட பஜ்ரங் தள் மாவட்ட அமைப்பாளர் யோகேஷ் ராஜ் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், சுபோத்தை அவரது துப்பாக்கியை பிடுங்கி சுட்டது ராணுவ வீரரான ஜீத்து என்பது தெரியவந்தது. ஆனால், இதை ஜூத்துவின் தாயாரான ரத்தன் கவுர் மறுத்துள்ளார்.
கலவரத்தின் போது எடுக்கப்பட்ட பலரது கைப்பேசிகளின் வீடியோ பதிவுகளில் சுபோத்தை ஜீத்து சுடும் காட்சி ஆதாரமாகக் கிடைத்திருப்பதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், கலவரத்தின் போது அஜாக்கிரதையாக இருந்ததாக கூறி, புலந்த்சாகர் மாவட்ட எஸ்பியான கிருஷ்ண பாகதுர் சிங் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான அறிக்கையின் அடிப்படையில் அவரை உளவுத்துறை ஏடிஜி பணியிட மாற்றம் செய்துள்ளார். வன்முறை சம்பவத்தின் போது திறம்பட செயல்பட்டு, கலவரத்தை அடக்க கிருஷ்ண பாகதுர் சிங் தவறி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கலவரத்தின் போது, முன் எச்சரிக்கையாக கூடுதல் பாதுகாப்பு படையையும் குவிக்க தவறி விட்டார் என்றும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், ஏற்கனவே, காவல் அதிகாரி சத்ய பிரகாஷ், மொராதாபாத் காவலர் பயிற்சி பள்ளிக்கு மாற்றப்பட்டு விட்டார். காவலர் சுரேஷ்குமார் என்பவரும் லலித்பூர் பகுதிக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார். தற்போது, காவல்துறை எஸ்பி கிருஷ்ண பாகதுர் சிங் என மொத்தம் 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆளும் பாஜகவுக்கு விவகாரம் தொடர்ந்து நெருக்கடி தந்தால், மேலும் பல தலைகள் உருளும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications