For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முசபார்நகர் கலவரத்தில் ஏகே 47 துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதா?

By Siva
Google Oneindia Tamil News

Police suspect use of AK 47 rifles in Muzaffarnagar riots
லக்னோ: முசாபர்நகர் கலவரத்தின்போது ஏகே 47 துப்பாக்கிள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இரு சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு அது பெரும் கலவரமாய் வெடித்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பரவிய இந்த கலவரத்தில் 38 பேர் பலியாகினர்.

இந்நிலையில் இந்த கலவரத்தின்போது ஏகே 47 துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கலவரம் நடந்த கிர்தல் கிராமத்தில் இருந்து ஏகே 47 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 41 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரி அருண் குமார் கூறுகையில்,

கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஏகே 47 ரக துப்பாக்கி தோட்டாக்கள் 41, 9 மிமீ தோட்டாக்கள் 17, நாட்டுத் துப்பாக்கி தோட்டா 1, 1 துப்பாக்கி மற்றும் சில ஆயுதங்கள் கிடைத்தன. ஏகே 47 ரக துப்பாக்கி தோட்டாக்களை நாட்டுத் துப்பாக்கிகளிலும் பயன்படுத்தி இருக்கலாம். ராணுவம் மற்றும் போலீசாருக்கு மட்டுமே கிடைக்கும் இந்த தோட்டாக்கள் அந்த கிராமத்தினருக்கு எப்படி கிடைத்தது என்று விசாரணை நடத்தப்படும் என்றார்.

English summary
The UP police officials suspect that there is a clue of AK 47 rifles being used in Muzaffarnagar during the communal riots as their team have recovered AK 47 bullets from the riot-hit areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X