தேசிய மாநாட்டு கட்சி எம்.எல்.ஏ பாதுகாப்பு வீரர் சுட்டுக்கொலை! காஷ்மீரில் தீவிரவாதி வெறிச்செயல்
ஸ்ரீநகர்: தீவிரவாதி மறைந்திருந்து சுட்டதில், ஜம்மு காஷ்மீர் மாநில எம்.எல்.ஏவின் பாதுகாவலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்கம் மாவட்டத்தின் ரூடிவானா பகுதியில் இன்று காலை ஜகூர் அகமது தார் என்ற, போலீஸ்காரர் பைக்கின் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். பைக்கை ஜகூர் அகமது இலாஹி என்பவர் ஓட்டிக் கொண்டிருந்தார். அப்போது மறைந்திருந்த தீவிரவாதி ஒருவன், ஜகூர் தாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். உடலில் குண்டு பாய்ந்த ஜகூர் தார் அதே இடத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.

இந்த தாக்குதலின்போது பைக்கை ஓட்டிச் சென்ற இலாஹி படுகாயம் அடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த போலீஸ்காரர் ஜகூர் அகமது தார், தேசிய மாநாட்டு கட்சியின் ஜம்மு காஷ்மீர் மாநில எம்.எல்.ஏவான அப்துல் மஜீத் லார்மியின் பாதுகாவலராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications