எல்லா திட்டமும் பிரதமரின் ஜஸ்ட் 2 நண்பர்களுக்காகவே கொண்டுவரப்படுகிறது - பாஜகவை விளாசிய பிரியங்கா
உத்தரகாண்ட்: பிரதமரின் நண்பர்களான 2 தொழிலதிபர்களுக்காகவே நாடு முழுவதும் கொள்கைகள் நடந்து வருகின்றன என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் முதற்கட்டத் தேர்தல் முடிவடைந்திருக்கும் நிலையில், அங்கு காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. அதேபோல, உத்தரகாண்டில் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்கவும் காங்கிரஸ் கட்சி பிரசாரம் செய்கிறது.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் காங்கிரஸ் கட்சியின் முகமாக வலம் வரும் பிரியங்கா காந்தி, ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களிலும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

பிரியங்கா காந்தி
உத்தரகாண்ட் மாநிலம் கதிமாவில் இன்று காலை பிரியங்கா காந்தி பிரசாரம் செய்தார். அப்போது, ''பிரதமரின் நண்பர்களான 2 தொழிலதிபர்களுக்காகவே நாடு முழுவதும் கொள்கைகள் நடந்து வருகின்றன. பட்ஜெட் வரும்போது, ஏழைகள், விவசாயிகள், நடுத்தர வர்க்கம், சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு எதுவும் வழங்காது'' என்று தெரிவித்துள்ளார்.

கடமை
மேலும் ''ஒரு அரசியல் தலைவரின் மிகப்பெரிய கடமை என்ன, மக்களுக்கு சேவை செய்வது, அவர்களின் வளர்ச்சி. இன்று அனைத்து பாஜக தலைவர்களும் - உங்கள் முதல்வர் முதல் நாட்டின் பிரதமர் வரை - தங்கள் சொந்த வளர்ச்சியைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். யாரும் உங்களைப் பற்றி நினைக்கவில்லை'' என மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார் பிரியங்கா காந்தி.

உத்தரகாண்ட்
70 இடங்களைக் கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு பிப்ரவரி 14-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இங்கு அனைத்து கட்சிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. உத்தரகாண்ட் தேர்தல் பிரசாரம் ஓய உள்ள நிலையில் இறுதி கட்ட பிரசாரங்கள் நடக்கிறது. அண்மையில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, நான் டெல்லியில் வசித்தாலும் என் மனதில் இருப்பது எல்லாம் உத்தரகாண்ட் மக்கள்தான் என்றார். காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கும் குறைவாக கிடைக்கும் என்றார் ராகுல் காந்தி. உத்தரகாண்ட் மாநிலத்தை சர்வதேச ஆன்மீக தலமாக மாற்றுவோம் என்பது ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் வாக்குறுதி.

காங்கிரஸ்
உத்தரகாண்டில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் பல காங்கிரஸ் தலைவர்கள் வேறு கட்சிக்கு சென்றுவிட்டதால், காங்கிரஸ் கட்சி கலக்கத்தில் இருக்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் உத்தரகாண்டில் பிரசாரம் செய்யவுள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications