பெங்களூரில் பெண்ணை வைத்து பணக்காரர்களிடம் பணம் பறித்து வந்த 3 கான்ஸ்டபிள்கள்
பெங்களூர்: பெங்களூரில் ஒரு பெண் மூலம் பல தொழில் அதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்களை காம வலையில் விழவைத்து மிரட்டி பணம் பறித்து வந்த 3 கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரை சேர்ந்தவர்கள் கான்ஸ்டபிள்களான பசவராஜ் மதபாதி, முகமது இல்யாஸ் மற்றும் விஜய குமார். அவர்கள் கொடிகேஹள்ளியில் வசிக்கும் 25 வயது பெண்ணான யாஸ்மீன் என்பவரை வைத்து தொழில் அதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு போன் செய்து நைசாகப் பேசி அவரின் வீட்டிற்கு வரவழைத்துள்ளனர்.
யாஸ்மீன் வீட்டிற்கு வந்தவர்களும் அவருடன் நெருக்கமாக இருந்துள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் யாஸ்மீனின் வீட்டில் மறைத்து வைக்கப்படிருந்த மேராவில் பதிவாயிகியிருந்தது. யாஸ்மீனுடன் அவர்கள் நெருக்கமாக இருந்த வேளையில் அந்த 3 கான்ஸ்டபிள்களும் அங்கு திடீர் என சோதனைக்கு வருவது போன்று வந்து தங்களை நகர குற்றப்பிரிவு அதிகாரிகள் என அறிமுக செய்து கொண்டு தொழில் அதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்களை வழக்குப்பதிவு செய்வோம் என்று மிரட்டி பணம் பறித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ரியல் எஸ்டேட் அதிபர் வெங்கடப்பா என்பவருக்கு போன் செய்த யாஸ்மீன் நிலம் வாங்குவது தொடர்பாக பேச வேண்டும் என்று கூறி அவரை வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த வெங்கடப்பா மற்றவர்களை போன்று யாஸ்மீனின் ஆசை வார்த்தைக்கு மயங்கவில்லை. இதையடுத்து அங்கு வந்த கான்ஸ்டபிள்கள் வெங்கடப்பா யாஸ்மீனிடம் மயங்காததை பார்த்துவிட்டு வம்படியாக அவரது சட்டையை கழற்றி யாஸ்மீனுடன் வைத்து புகைப்படம் எடுத்துள்ளனர்.
ரூ. 2 லட்சம் அளிக்காவிட்டால் புகைப்பட ஆதாரத்தை வைத்து வழக்குப்பதிவு செய்வோம் என மிரட்டியுள்ளனர். முதலில் வெங்கடப்பா பயந்து போய் ரூ.25 ஆயிரமும், ஒரு காசோலையும் அளித்துள்ளார். காசோலை வேண்டாம் என்று கூறிய அந்த 3 பேரும் வெங்கடப்பாவை பணத்தை எடுத்துக் கொண்டு வருமாறு கூறியுள்ளனர்.
அங்கிருந்து கிளம்பிய வெங்கடப்பாவுக்கு சந்தேகம் ஏற்பட்டு தனது நண்பரான போக்குவரத்து போலீஸ்காரரை அணுக அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து வெங்கடப்பா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அவரது புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் பணத்தை எடுத்துக் கொண்டு சென்று 3 கான்ஸ்டபிள்களிடம் அளிக்குாறு அளியுங்கள் நாங்கள் வந்து அவர்களை கையும் களவுமாக பிடித்து விடுகிறோம் என்று கூறியுள்ளனர். வெங்கட்பபாவும் அவ்வாறு செய்ய 3 கான்ஸ்டபிள்களும் போலீசாரிடம் சிக்கினர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அந்த 3 பேரும் கடந்த 2 ஆண்டுகளாக இப்படி பலரை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
-
இந்திய டெக் ஊழியர்களை கதறவிட்ட Meta.. 3 பிரிவில் கண்ணை மூடிக்கொண்டு பணிநீக்கம்.. எங்குபோய் முடியுமோ -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications