பிரதமர் அதிர்ச்சி...அமித் ஷா ட்வீட்....பினராயி விஜயன் உத்தரவு...ராகுல் ஆறுதல்!!
கோழிக்கோடு : கேரளா முதல்வர் பினராயி விஜயனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு விமான விபத்து குறித்து கேட்டு அறிந்தார். அப்போது, விமான விபத்து குறித்தும், மீட்புப் பணிகள் குறித்தும் எடுக்கப்பட்டு இருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் பினராயி விஜயன் விளக்கம் அளித்தார்.
Recommended Video

மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கு தேசிய பேரிடர் மேலாண்மை பீட்பு படைக்கு மீட்புப் பணிகளில் ஈடுபடுமாறு உத்தரவு உள்துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கேரளா முதல்வர் பினராயி விஜயனும் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு தீயணைப்பு வீரர்களுக்கு, மீட்புப் படையினருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ட்வீட்டில் விமான விபத்து அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படைக்கு மீட்புப் பணிகளில் ஈடுபடுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

''உடனடி நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு தீயணைப்பு மற்றும் போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன். மீட்பதற்கும், உரிய மருத்துவ உதவி வழங்குவதற்கும் உத்தரவு பிறப்பித்துள்ளேன்'' என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்வீட்டில், ''கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். காயம் அடைந்தவர்களின் குடும்பத்துக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கும் உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.

பாமக தலைவர் ராமதாஸ் தனது பதிவில், ''கேரள மாநிலம் கோழிக்கோடு விமானநிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சி அடைந்தேன். மேலதிக விபரங்கள் எதுவும் தெரியாத நிலையில், விமானத்தில் இருந்த 174 பயணிகள் உள்ளிட்ட 191 பேரையும் காப்பாற்ற நடவடிக்கை தேவை'' என்று பதிவிட்டுள்ளார்.

-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications