ரஜினி அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்- இந்தி நடிகர் நானா படேகர் பளிச் கமெண்ட்
ரஜினிகாந்திற்கு அரசியல் சரிப்பட்டு வராது என இந்தி நடிகர் நானா படேகர் தெரிவித்துள்ளார்
மும்பை: ரஜினி காந்திற்கு அரசியல் சரப்பட்டு வராது என்றும் அதற்கு அவர் ஒத்துவர மாட்டார் என பிரபல இந்தி நடிகர் நானா படேகர் தெரிவித்துள்ளார்.
இந்தி திரையுலகில் பிரபலமான நடிகர் நானா படேகர். உணர்வுபூர்வமான நடிகர் என்று பெயர் பெற்ற நானா படேகர் நிஜ வாழ்க்கையில் தனது சம்பாதியத்தை விவசாயிகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்காக வழங்கி வருகிறார்.

அரசியல், சமூகம் குறித்து தனது பளிச் கருத்துகளை வெளியிட்டு வரும் நானா தற்போது ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
காலா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நானா படேகர் நடித்து வரும் நிலையில், ரஜினி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அவரிடம் ஆலோசித்ததாகவும் நானா படேகர் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினிக்கு அரசியல் சரிப்பட்டு வராது என்றும், அதில் அவர் தீவிரமாக இறங்கினால் இதுநாள் வரை சம்பாதித்த பெயர் புகழ் அனைத்தையும் இழந்து விடுவார் என்று நானா படேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியலில் ஜெயிப்பதற்கு என்று சில விரும்பதகாத தகுதிகள் வேண்டும் என்றும், நல்ல குணம் படைத்த ரஜினி அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்றும் படேகர் தெரிவித்துள்ளார்.
அரசியலில் மக்களுக்காக போராட வேண்டும், இல்லையென்றால் மக்கள் நமக்கு எதிராக போராட தொடங்கி விடுவார்கள் என்று கூறிய படேகர், இந்த கருத்தை ரஜினியிடமே தாம் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்












Click it and Unblock the Notifications