மே.வங்கத்தில் பெரும் களேபரங்களுக்கு இடையே.. நடந்து முடிந்த 4-ம் கட்ட தேர்தல்.. 80.9% வாக்குகள் பதிவு!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. 80.9% வாக்குகள் பதிவாகியுள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இதில் முதல் 3 கட்டங்களில் 91 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. இன்று 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்குப்பதிவு நடந்த பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் வெடித்தன.

கூச் பிகார் வாக்குச்சாவடியில் திடீரென வன்முறை மூண்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்தனர். உள்ளூர் மக்கள் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிகளை பறித்ததாகவும், இதனால் பாதுகாப்பு படையினர் அவர்களை துப்பாக்கியால் சுட்டதாவும் தகவல் வெளியானது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது குற்றம்சாட்டினார்.
பல்வேறு வன்முறை சம்பவங்களுக்கு மத்தியிலும் பொதுமக்கள் ஆர்வமுடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். பல இடங்களில் விறுவிறுப்புடன் வாக்களித்தனர். இந்த நிலையில் இன்று மாலை 6.30 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்தது. சுமார் 80.9% வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் அருகில் உள்ள பள்ளி கட்டிடங்களில் வைக்க பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. மேற்கு வங்கத்தில் இன்னும் 4 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications