ஆப்கா ஓட்டு 'மோடிஜி'க்கே: வாரனாசியில் பொன். ராதாகிருஷ்ணன் பிரச்சாரம்
வாரனாசி: வாரனாசியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கு ஆதரவாக தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் செய்கிறார்.
பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி குஜராத்தில் உள்ள வதோதரா மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள வாரனாசி ஆகிய 2 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் வதோதரா தொகுதியில் கடந்த 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதியில் மோடிக்கு ஆதரவாக தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்களான ஹெச். ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோர் பிரச்சாரம் செய்தனர்.

வாரனாசியில் வரும் 12ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு வாரனாசி புறப்பட்டு சென்றுள்ளது. அந்த குழு வாரனாசியில் தமிழர்கள் வாழும் பகுதியில் வீடு, வீடாகச் சென்று இன்று முதல் வாக்கு சேகரிக்கிறது.
தமிழர்களிடம் கொடுக்க அவர்கள் எடுத்துச் சென்றுள்ள துண்டு பிரசுரங்களில் கூறியிருப்பதாவது,
உலகை காக்கும் விசுவநாதர் பூமி காசி. இனி பாரதத்தை காக்கும் மோடியின் பூமியும் காசி.
வாரனாசி வாக்காள பெருமக்களே... தருமத்தை காத்து வாழும் நீங்கள் பாரதத்தை காத்திட மோடியின் தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்.
தமிழக மக்கள் சார்பில் தங்களிடமும், காசி விசுவநாதரிடமும் வேண்டும் ஒரே வேண்டுகோள் இது தான்... என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக குழு வரும் 10ம் தேதி வரை வாரனாசியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications